Monday, 25 September 2017

கவிதை

சாதி 

பறையர் சுடுகாடு 

படையாட்சி சுடுகாடு 

தலைமுழுக ஒரே ஆறு!

                           - அறிவுமதி 

#விழிப்புணர்வு 

பசியிலும் பிச்சைக்காரன் 
சிறுகச் சிறுகச் சேமித்தான் 
என்றாவது ஒரு நாள் 
தங்கத் திருவோடு 
வாங்குவதற்காக !

                            - பூரணி

#தாய் மொழி 

தமிழ் 
உன்னை 
மொழிகளுக்கெல்லாம் 
முதல் மொழி என்றார்...
அதனால் உன்னை 
முதலாகப் போட்டு 
வியாபாரம் தொடங்கிவிட்டார் !

                          - அப்துல் ரகுமான் 

#தலைவன் 

வேஷங்கள் 
போட்டுப்போட்டு அது 
தோல் சதை எலும்புக்குள் இறங்கி 
வேஷமே உங்கள் இயல்பாகிவிட்டது 

                          - புவியரசு 

#வியாபாரம் 

எதிலும் எப்போதும் 
காசைக் குறிவை.
தேசம் முழுதும் 
தீக்கிரையாயினும் 
சாம்பலை விற்றுச் 
சம்பாத்தியம் நடத்து!

                                 - கந்தர்வன்  

#அரசியல் 

வாயிலே அழுக்கென்று 
நீரெடுத்துக் கொப்பளித்தேன்
கொப்பளிக்கக் கொப்பளிக்க
வாயும் ஓயாமல் அழுக்கும் போகாமல் 
உற்றுப் பார்க்கிறேன்...
நீரே அழுக்கு! 

                                - சுப்ரமண்ய ராஜு 

#பெண்ணுரிமை 

விரல் நகம் தான் பெண்ணும் 
அடங்கியிருந்தால் 
அலங்கரிக்கப்படுகிறாள் 
தாண்டி வளர்ந்தால் 
தண்டிக்கப்படுகிறாள்!

                             - ரேவதி   கணேஷ் 

No comments:

Post a Comment