<3
நேச மித்ரன்
..............................
மீண்டும் மீண்டும் அதே கிளையில்
அமர்கிறது பறவை
அப்படி என்ன செய்து விட்டது மரம் ?
தாங்கத் தெரிந்திருக்கிறது
................
கோவில் யானை தன் மரணத்திற்கு
யானைகளுக்குப் பதிலாக
குழந்தைகளின் கண்ணீரை சேர்த்து வைத்துவிட்டுப் போயிருக்கிறது
பெரிய வித்தியாசமில்லை
...............
No comments:
Post a Comment