Tuesday, 20 August 2019

படித்தது

[10/08, 11:47 am] மணிகண்ட பிரபு: கடல் பார்க்க
போயிருந்த சிறுமி  கரையில் அமர்ந்து
கைகளால் மணலை அளைந்த பொழுது
விரல்களில் சிக்கிய
பழுப்புநிற
அரைவட்ட கிளிஞ்சல் ஒன்றை வெகுநேரம்
உள்ளங்கையில் வைத்து
அழகு பாரத்த பின்

ஏதோ நினைத்தவளாய்
கடலில் வீசியெறிந்து
திரும்பினாள்,

தேடும் அலைகளின்
தேவையை தீர்த்துவைத்த
நிம்மதியில்.

-சிவசங்கரி

[10/08, 12:06 pm] மணிகண்ட பிரபு: காற்றின் வீடு

கைவிடப்பட்ட வீட்டின் உள்ளே
காற்றுதான் நுழைய துணிகிறது.
இயல்பாக தன்னந்தனியாக
சன்னல் கதவை அசைத்துக்கொண்டு
உள்ளே செல்கிறது
சுவர்களை வருடியபடி
காலியான அறைகள் தோறும்
ஒழுகிச்செல்கிறது
ஒட்டடைகள் மீது
மெல்ல ஊதி அதிரச்செய்கிறது
தரையின் குப்பைகளை அள்ளி
சுவரோரமாகக் கூட்டுகிறது.
பயனிழந்துபோன அனைத்தையும் தொட்டு
மர்மமாகச் சிரித்துக்கொள்கிறது
வெளியேறும் முன்பு
தூசுப்படலத்தின் மென்மைமீது
தன் விரல்களால்
எதையோ கிறுக்கிச் செல்கிறது

-ஜெயமோகன்

[11/08, 6:59 am] மணிகண்ட பிரபு: வாழ்க்கைத் தேர்வில்
வெற்றி பெறுகிறவர்கள்
விடைகளை அறிந்தவர்கள் இல்லை
வினாக்களை அறிந்தவர்களே
-அப்துல்ரகுமான்
[11/08, 7:02 am] மணிகண்ட பிரபு: நல்லவர்களை அடையாளம் காண ஒரு வழி?
"மாசக்கடைசியில் அவர்கள் கஷ்டப்பட்டுக்கொண்டு இருப்பார்கள்
-மதன்
[11/08, 8:29 am] மணிகண்ட பிரபு: முதலில் கம்யூனிஸ்டுகளை பிடித்துக்கொண்டு போக வந்தனர்
நான் வாயைத் திறக்கவில்லை
ஏனெனில் நான் கம்யூனிஸ்ட் அல்ல.

பிறகு அவர்கள் யூதர்களைப் பிடித்துக்கொண்டு போக வந்தனர்
நான் ஏதும் பேசவில்லை
ஏனெனில் நான் யூதன் அல்ல.

பிறகு அவர்கள் தொழிற்சங்கவாதிகளைத் தேடிக்கொண்டு வந்தனர்
நான் ஏதும் பேசவில்லை
ஏனெனில் நான் தொழிற்சங்கவாதி அல்ல.

பிறகு அவர்கள் கத்தோலிக்கர்களைத் தேடிக்கொண்டு வந்தனர்
நான் ஒரு புரொட்டஸ்டன்ட்
எனவே நான் ஏதும் பேசவில்லை.

பிறகு அவர்கள் என்னைப் பிடிக்க வந்தனர்
அப்போது எனக்காகப் பேசுவதற்கு யாருமே இல்லை.

- மார்ட்டின் நீய்மொல்லர்

[12/08, 7:42 am] மணிகண்ட பிரபு: இந்த உலகம் காலந்தோறும் குழந்தையைப் போன்ற வெகுளித்தனம் கொண்ட மனிதர்களால் மட்டுமே பாதுகாக்கப்படுகிறது.

ஓஷோ

[12/08, 7:46 am] மணிகண்ட பிரபு: எங்கள் ஊர் யானைகள்
பத்து பைசாவுக்காக
எவரெவர் காலிலோ விழுகின்றன

- மு. சுயம்புலிங்கம்
(யானைகள் தினம்)

[12/08, 7:51 am] மணிகண்ட பிரபு: சென்னையில் மிகப்பெரிய கட்டுமான நிபுணராக விளங்கிய நம்பெருமாள் செட்டியார் வாழ்ந்த பகுதி "செட்டியார் பேட்டை" என அழைக்கப்பட்டது. பின்னாளில் அது "சேத்துப்பட்டு" என மாறியது-p

#Info

[12/08, 8:03 am] மணிகண்ட பிரபு: பகிரப்படாத நேசத்தின்
துயரென்னைத் தின்கிறது
தனக்குத்தானே கட்டிக்கொண்ட
கைகளின் தனிமை போல

-தமிழச்சி

[12/08, 1:59 pm] மணிகண்ட பிரபு:

You know
you've read a good book
when you turn the last page
and feel a little
as if you have lost a friend ...
-Paul Sweeney -

[13/08, 6:54 am] மணிகண்ட பிரபு:

இருட்டு எனும் சுகம் நிம்மதி. தூங்கிவிட்டால் போதும் பதிலற்ற கேள்விகள் அப்படியே இருளில் ஆழ்ந்து போகும்

-ஜெமோ

[13/08, 7:34 pm] மணிகண்ட பிரபு: பேருந்து பயணம்பற்றி
-லா.ச.ரா வின் காட்சி

இந்தக்காலத்தில் பஸ்ஸில் போவதென்றால் என்ன என்று தெரியுமா..

ஒவ்வொரு வண்டியும் ஒரு மகாமக உற்சவம்-சினிமாக் கொட்டகையின் புதுப்படத்தின் முதல்நாள் கூட்டம். உள்ளே புகுவதே பிரயாசை-புகுந்து தோல்வாரைப் பிடித்துத் தொங்க இடம் கிடைப்பதே துர்லபம். உட்கார இடம் கிடைத்தால்.. அடேயப்பா!

முறைத்துப் பார்க்கும் எண்ணத்துடனேயே,ஓர் ஆளை உன்னிப்பாய் பார்ப்பார்கள்.
ஒவ்வொருவர் மனதிலும் எத்தனையோ குருட்டு யோசனைகள்.

[14/08, 7:56 am] மணிகண்ட பிரபு: மனிதர்கள் எப்போது சிந்திக்கிறார்கள்?

தேர்தலுக்குப் பிறகு

-சோ

[14/08, 7:05 pm] மணிகண்ட பிரபு: பக்குவம் என்பது நாமே இறங்கி, அனுபவித்து,அடிபட்டு கற்றுக்கொள்வதல்ல.. ஒவ்வொரு விசயத்திலும் மற்றவர்கள் என்னென்ன அனுபவிக்கிறார்கள்,அடிபடுகிறார்கள் என வெளியிலிருந்தே கண்டுணர்ந்து அதில் நாம் இறங்காமலே கற்றுக்கொள்வது.

கு. விநாயக மூர்த்தி.
[14/08, 7:48 pm] மணிகண்ட பிரபு: வரலாறு என்பது துரோகத்தின் மிச்சம்
வாழ்க்கை என்பது துயரத்தின் மிச்சம்

-நாஞ்சில் நாடன்

No comments:

Post a Comment