[09/11, 7:18 am] மணிகண்ட பிரபு: அறிவுரை குறித்து ஆண்டன் செக்காவ் To advice is not to compel என்பார்.அதாவது என் கருத்து,என் பார்வை இது என்று நிறுத்திக்கொள்வதே நாகரிகம் என்று
-சுப.வீ
[09/11, 7:21 am] மணிகண்ட பிரபு: விளக்கு வெளிச்சம் அறை எவ்வளவு சிறியதென்று எடுத்துக்காட்டியது
-ஜி.நாகராஜன்
[09/11, 7:29 am] மணிகண்ட பிரபு: கூச்சத்தின் வலி கொடியது.
அது பல்லில் வந்தாலும் சரி,
சொல்லில் வந்தாலும் சரி..!
-பாதசாரி
[09/11, 7:34 am] மணிகண்ட பிரபு: மனத்தின் முரண்பாடுகளில் ஒன்று
எது கிடைத்தாலும் நீ சலிப்படைவாய்,
எது கிடைக்காவிட்டாலும் அதற்காக ஏங்குவாய்
-ஓஷோ
[09/11, 7:37 am] மணிகண்ட பிரபு: மேகம் மழையாய் இறங்கியபோது, நனைந்து சிலிர்த்த பூமி சொன்னது "பெருமை மேலே ஏறுவதில் இல்லை கீழே இறங்குவதில் இருக்கிறது"
-அப்துல்ரகுமான் பிறந்ததினம்
[09/11, 6:05 pm] மணிகண்ட பிரபு:
மனிதர்களிடம் நிலவ வேண்டியது பரஸ்பர மதிப்பே தவிர,பரஸ்பர அன்பு அல்ல்; அப்போதுதான் ஏமாற்றுக் குறையும்
-ஜி.நாகராஜன்
No comments:
Post a Comment