2015ல் துல்கர் சல்மான்,பார்வதி நடிப்பில் வந்த படம் சார்லி.இது தற்போது மாறா எனும் பெயரில் தமிழுக்கு மாதவன் நடிப்பில் வரவுள்ளது.அப்போதே மிகப் பெரும் வெற்றியை பெற்ற படம்.லாக்டவுன் ஆரம்பித்த நாட்களில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட படம்.நாயகி நாயகனை தேடும் கதைதான் என்றாலும் அத்தனை சுவாரஸ்யமாய் கதை சொன்னபடம்.
#கதை
பெங்களூரில் பணிபுரியும் பார்வதி சொந்த ஊருக்கு திரும்புகிறார்.கண்டிப்பான தாய் சீதா.. பார்வதிக்கு அழகற்ற ஒரு மாப்பிள்ளை பார்க்க யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு சென்று ஒரு பழைய வீட்டில் குடியேறுகிறார். அங்கு முன்பு குடியிருந்த துல்கர் சல்மான் விட்டுச்சென்ற பொருள் இருக்கிறது.அதனை அப்புறப்படுத்தும் போது துல்கர் வரைந்த படக்கதை புத்தகம் கண்ணில் படுகிறது.அதில் புத்தாண்டு இரவில் துல்கர் வீட்டில் திருட வரும் திருடனுடன் நட்பாகி அன்று இரவு ஒரு த்ரில்லுக்காக அவனுடன் திருட செல்கிறார் துல்கர்.அங்கு வீட்டின் ஓட்டை பிரிந்தவுடன் இருவரும் ஷாக்காகி நிற்க..படக்கதை புத்தகமும் பாதியில் நிற்க, படித்த பார்வதியும் ஆடியன்சும் என்னவெனத் தெரியாமல் ஷாக்காகி பாதியில் நிற்க.. அப்பிடி என்னதான் வீட்டிற்கும் பார்த்திருப்பார்கள் என யோசிக்கின்றனர்.
அதிலிருந்து மீதிக்கதை தேட கிளம்பும் பார்வதி.. சார்லியையும் ஆர்வத்துடன் தேடும் கதை ஆரம்பிக்கிறது. அப்பிடி என்னதான் ஓட்டுக்குள் இருந்தது திருடனில் ஆரம்பித்து,அவன் சொல்லும் நபர், அவர் சொல்லும் இன்னொரு நபர் என சங்கிலித் தொடர் போல் சார்லி குறித்த சுவாரஸ்ய சம்பவங்கள் பார்வதி கேட்கிறாள். கதையோடு சேர்த்து சார்லியை காண வேண்டும் என ஆவல் பிறக்கிறது. தேடிச் செல்கிறாள்.முடிவில் என்ன ஆனது என்பது தான் கதை.
ஜே.ஜே சில குறிப்புகள் போல் ஒரு பிம்பத்தின் மீது வரும் மரியாதையைப் போல் படம் நெடுகிலும் சார்லி குறித்த பாசிட்டிவ் எனர்ஜி பார்வதிக்கு. வழிப்போக்கனாய்,ஜிப்சியாய் திரியும் பாசிட்டிவ் கதாபாத்திரத்தில் துல்கர் கச்சிதம்.தான் பார்த்த அழகியலை ஒவ்வொருவருக்கும் விளக்கும் போது வாழ்க்கை மீது பிடிப்பை ஏற்படுத்துகிறார் துல்கர்.
தேடல், ஏமாற்றம் என படம் முழுக்க தாங்கிச் செல்கிறார் பார்வதி.ஒவ்வொரு இடத்திலும் நாயகன் மீதான அபிப்ராயம் வளர வளர ஆர்வத்துடன் அடுத்தடுத்த இடங்களுக்கு செல்கிறார்.இறுதிக் காட்சியில் அத்தனை ஆச்சர்யத்தையும் செல்லுலாய்டில் துல்கரை பார்த்து பதிவிடுகிறார்.
முதல் காட்சியில் லிப்ட் கொடுப்பதை இறுதியில் கனெக்ட் செய்தது, இன்டர்வெல் ப்ளாக்கில் முன்பின் சொல்லும் ஒரு சிறுகதை,இறுதியில் தான் ஸ்ருதி என அறிமுகமாகி துல்கரின் அன்பை பார்க்கும் இடம்,
என திரைக்கதையில் சுவாரஸ்யம் தந்திருக்கிறார் இயக்குநர் மார்டின் பிரக்கட்.கழுகுப் பார்வை ஒளிப்பதிவில் அத்தனை ரம்மியம். உறுத்தல் இல்லாத
ஒரு நல்ல ஃபீல் குட் மூவி.
No comments:
Post a Comment