ஐ.சி.யூ வார்டில் இருப்பவரை பார்த்து எப்படி இருக்கு எப்படி இருக்குனு கேட்பது போல் நேற்றிலிருந்து எப்படி இருக்கு மாஸ்டர் னு கேட்கும் குரல்கள் அதிகம்.விஜய் ரசிகர்களுக்கு ஃபுல் மாஸ் எண்டர்டெயினர்.பெரிய ஹீரோ படத்தில் வில்லன் கேரக்டர் ஓவர் பில்டப் கொடுத்து மொக்க பீஸ்னு காமிச்சிருப்பாங்க.ஆனால் விஜய்க்கு ஈக்குவலா மாஸ் காட்டியிருக்கிறார் விஜய் சேதுபதி.
#கதை
ஓபனிங் சீனில் குடும்பத்தையே கொலை செய்து..எஞ்சிய வாரிசான விஜய் சேதுபதியை கருணை அடிப்படையில் கொல்லாமல் விடுகின்றனர்.அவர் கொலை,கொள்ளை, செய்து சீர்திருத்தப் பள்ளி மாணவர்களை முறைகேடாக பயன்படுத்துகிறார்.
சென்னையில் கல்லூரி பேராசிரியராக(உளவியல்) பணிபுரிகிறார் விஜய்.மாணவரின் மனம் கவர்ந்தவர் ஒரு கட்டத்தில் கல்லூரியில் ஏற்பட்ட சில சிக்கல் காரணமாக சிக்கல் மிகுந்த சீர்திருத்தப் பள்ளிக்கு ஆசிரியராக வருகிறார்.3 மாதத்தில் சென்றுவிடலாம் என விளையாட்டுத்தனமாய் வந்தவருக்கு அங்கு நிகழும் மரணங்கள் விஜய் சேதுபதியை பழிவாங்க முடிவு செய்கிறார்.முடிவு என்ன என்பது கதை
#ப்ளஸ்
*எழுத்துப் போடுவதில் கூட மாஸ் படத்திற்கான டெம்ளேட் தொடங்குகிறது.
*படத்தின் இருபெரும் தூண்களில் ஒருவர் விஜய்.ஸ்லிம்,மேனரிசம், என As usual rocking.இன்னொருவர் விஜய் சேதுபதி. யதார்த்த நடிப்பு , உடல் மொழி, நக்கல் என ஹேப்பி அண்ணாச்சி.
*ஹீரோ வில்லன் பார்க்காமல் கடைசி இருபது நிமிடங்கள் பார்ப்பது எதிர்பார்ப்பில் ஏலக்காய் தூவிய இனிய மணம்.இண்டர்வெல்லில் ஐ எம் வெயிட்டிங்னு வி.சே சொல்வது, க்ளைமேக்சில் டி ஆர் பாட்டை விஜய் பாடுவது க்ளாஸ்
*இருட்டில் வி.சே னே தெரியாமல் அவரையே கத்தி வைத்து மிரட்டுவது.
*கபடிக்காட்சி..கில்லி மியூசிக் எனர்ஜிடிக்.குடிக்கான காரணத்திற்கு ஒவ்வொரு பட கதை சொல்வது க்யூட்.
அடிக்கடி பாட்டு வராதது ஆறுதல்.
*"அடுத்தவனை திட்டாம நீ என்னப் பன்னபோறனு சொல்லி ஓட்டுக்கேளு"
"யாரைப் பார்த்துவேனா பயப்படலாம்.ஆனா சாவு நம்ம பக்கத்தில் நெருங்கும்போது எதிர்ல இருக்கிறவன பார்த்து பயப்படகூடாது"
"அடிதர்ற வலிய விட பயம் தர்ற வலி பெருசு"
"எமோசனல் இருக்கிறவன் எதுக்கு கோபப்படுறானு தெர்ல" வசனங்கள் கவனம் ஈர்க்கின்றன
*ஒளிப்பதிவு,இசை ஈர்க்கிறது
#மைனஸ்
*படத்தின் நீளம் 2-53 நிமிசம். ஒருமணி நேரம் கதையே துவங்காதது.
*இடைவேளைக்குப் பின் புத்திசாலித்தனம் இல்லாத திரைக்கதை வழக்கமான மண் ரோட்டில் பயணிக்கிறது.
*அடிக்கடி குடிப்பது உறுத்தல். இரு மரணத்தை பார்த்து திருந்துவது, பேசியே திருத்துவது,கதாநாயகி திருவல்லிக்கேணியில் ஓடிவிட்டு,
நாகர் கோயிலில் அடுத்த காட்சியில் தோன்றுவது.
*லாரி உரிமையாளர் சங்க தலைவர்களெல்லாம் ஈசியா சாகிறார்கள்.அவர்களுக்கு பின்புலமோ,ஆள்பலமோ இல்லையா பாஸ்.
*துணை நடிகர்கள் பட்டாளத்தை குறைத்திருக்கலாம்.இடைவேளைக்குப் பின் எல்லாக் காட்சிகளையும் எளிதில் யூகிக்க முடிகிறது.
விஜய் ரசிகர்களுக்கு இது மாஸ்டர் பொங்கல்.இன்னும் கொஞ்சம் ட்ரிம் பன்னி, புத்திசாலித்தனமான காட்சிகளை இரண்டாம் பாதியில் கூட்டியிருந்தால் எல்லாருக்குமான மாஸ்டர் பொங்கலா இருந்திருக்கும். ஆனாலும் நம்பி பார்க்கலாம். என்டர்டெயினர் மூவி.
-மணிகண்டபிரபு
No comments:
Post a Comment