Monday, 23 October 2023

ரயில் பிரேக்


ரயிலில் பிரேக்

இரயில் வண்டிகளில் உள்ள ப்ரேக் இருவகைப்படும். ஒன்று காற்றழுத்தத்தால் வேலை செய்யும். மற்றொரு முறை வெற்றிடம் (vacuum) மூலம் வேலை செய்யும்.
இரயில் பெட்டிகளில் உள்ள அபாயச் சங்கிலி இரயிலின் முதல் முக்கிய ப்ரேக் என்பதுடன் இணைக்கப்பட்டு இருக்கும். அபாய சங்கிலியை இழுத்தவுடன் அது ப்ரேக்கில் உள்ள வெற்றிடத்தை வெளிக்காற்றால் நிரப்பி விடும், அல்லது அதில் உள்ள அழுத்தத்தை உடனடியாக குறைத்து விடும். அதனால் இரயில் உடனே ஒரு பலத்த அதிர்ச்சியுடன் நிறுத்திவிடும்.
இதைத்தவிர, ஓட்டுநர் அருகே ஆபத்து காலத்தில் அவரே இயக்கவும் ஒரு அமைப்பு இருக்கும்.

நவீன இரயில் வண்டிகளில் அபாய சங்கிலியை இழுத்தால் அது வண்டியை உடனடியாக நிறுத்தாது. ஆனால் ஓட்டுனர் அறையில் இருக்கும் அபாய விளக்கு எரிந்து, அலாரம் ஒலிக்கும். அவர் உடனடியாக எந்த பெட்டியில் இழுக்கப்பட்டது என அறியலாம். அவர் அந்த இடத்தில் உள்ள பயணிகளை காணொலியில் கண்டு பேச முடியும். காரணத்தை அறிந்து அவர் இரயிலை அதிர்ச்சி இன்றி சௌகரியப்பட்ட இடத்தில் மெதுவாக நிறுத்த முடியும்.
(படம் : கூகுள்)

No comments:

Post a Comment