#30நாள்வாசிப்புப்போட்டி
#25RM055
புத்தகம்-54
பக்கங்கள் -252
நாள்-30
சமணமும் தமிழும்
-மயிலை சீனி வேங்கடசாமி
மயிலை சீனி வேங்கடசாமி அவர்களைப் பற்றிய ஆய்வுக் கட்டுரை ஒன்று.. இரு ஆண்டுகளுக்கு முன்பு சமர்ப்பித்து இருந்தேன். அந்த தேடலில் அவரைப் பற்றிய அறிந்து கொண்ட தகவல்கள் மிகவும் சுவாரசியமாக இருந்தது. இளம் வயதிலேயே ஆசிரியர் பணியில் சேர்ந்தாலும் நாள் தோறும் தன்னை புதுப்பித்துக் கொண்டும் தமிழுக்கு தொண்டு செய்தும் நூல்கள் எழுதியும் வெறுமனே புனைவுகள் போல் அல்லாமல் ஆய்வுக் கட்டுரைகள் நோக்கில் ஒவ்வொரு புத்தகமும் அவருடைய கை வண்ணத்தில் வெளிவந்துள்ளது. இந்த நூலில் சமணத்தின் வாழ்வும் அது சந்திக்க நேர்ந்த தாழ்வும் நம் நெஞ்சை நெகிழச் செய்யும் விதத்தில் உரிய சான்றுகளோடு.. நூலை படிப்பவர்கள் சமணம் குறித்த தன்னுடைய பார்வையை இன்னும் விசாலப்படுத்திக் கொள்ள உதவும் வகையில் இருக்கிறது.
சமண மதம் ஏன் மக்களிடையே பரவியது எனில் அவை கொலை வேள்விகளை எதிர்த்தது, சாதி வேற்றுமை பாராட்டுவதில்லை ,பிறப்பினால் உயர்வு தாழ்வு கற்பிப்பது இல்லை, தாய் மொழிக்கு மட்டும் உயர்வழிக்கும் வகையில் அதன் போதனைகள் இருக்கும் .ஏழை மக்களுக்கான உணவு, அடைக்கலம் மருந்து, கல்வி என நால்வகை தானங்களை அவை அளிக்க முன் வந்தது. குறிப்பாக இன்று நாம் படிக்கும் பள்ளிக்கூடம் சமணர்களின் சிந்தனையில் உதித்ததாகும். அக்காலத்தில் மதச் சண்டைகள் மூலமாக மன்னர்களை முதலில் மதம் மாற்றிய பின்பு மக்களை மாற்றினர். வன்முறைகளை ஏவி விட்டனர். பக்தி இயக்கம் தோன்றியதால் சமண மதம் வீழ்ச்சி அடைவதற்கான காரணங்கள். மேலும் வன்முறை ஏவி விட்டு சமணர்களை மதமாற்றம் செய்யும் பணிகளிலும் ஈடுபட்டனர். இதனால் சமண மதத்தில் உள்ள கருத்துக்கள் பலரம் இந்து மதத்தில் கலந்து விட்டன எனும் வியப்புக்குரிய செய்திகளையும் நாம் அறிய முடிகிறது.
சமணமும் தமிழும் என்னும் என் நூலை எழுதி முடிக்க 14 ஆண்டுகள் ஆயின என்று மயிலையார் தெரிவிக்கிறார். இந்த நூலில் வரலாற்று ஆய்வு நூல்கள், இலக்கிய ஆய்வு நூல்கள், சமயமும் தமிழும் ஆய்வு, கலையியல் ஆய்வு, கல்வெட்டு ஆய்வு பொது நூல்கள் என பல்வேறு தலைப்புகளில் சமணமும் தமிழும் எவ்வாறு சிறப்புக்கு விளங்கின என்பது குறித்த தகவல்களை ஆய்வு நோக்கில் தருகிறார்.
சமணர் என்பதற்கு துறவிகள் என்பது பொருள். துறவை வற்புறுத்திக் கூறி துறவு பூண்டவவரே வீடு பேறு அடைவார். என்று இந்த மதம் கூறுகிறது. எனவே துறவு எனப் பொருள்படும் சமணம் என்ற பெயர் இந்த மதத்துக்கு சிறப்பு பெயராக வழங்கப்படுகிறது. புலன்களையும் கர்மங்களையும் ஜெயித்தவர் வென்றவர் அவர்களின் தீர்த்தங்கரங்களுக்கு ஜீனர் என்னும் பெயரும் உண்டு. ஜுனரை கடவுளாக உடைய மதம் ஜெயின மதம் எனப்பட்டது. சமண சமய கடவுளுக்கு அருகன் என்னும் பெயரும் உண்டு. ஆகவே அருகனை வணங்குவோர் ஆருகதர் என கூறப்படுகிறது. சமண கடவுள் பற்றற்றவர் என அதன் உட்பிரிவுகள் முதல் கொண்டு அந்த மதம் குறித்த தகவலையும் நமக்குத் தருகிறார்.
சமண சமயத்தின் தத்துவமாக உயிரினும் ஜீவன் பற்றி கூறுகிறது. உயிர்களை கடவுள் படைக்கவில்லை. நல்வினை தீவினை என்னும் இரு வினைகளை செய்து அவற்றின் பயனாகிய இன்ப துன்பங்களை துய்ப்பதற்கு நான்கு கதிகளில் பிறந்து இறந்து உலர்ந்து திரிவதும் இரு வினைகள் அறுத்து பிறவா நிலையாகிய பேரின்ப வீட்டினை அடைவதும் உயிர்களின் இயல்பாகும் என்ற ஒரு தத்துவத்தை கூறுகிறார். அதே போல உயிர் அல்லது எனும் அஜீவன் எனும் பொருள்படும்படி உள்ள பகுதிகளில் ஐந்து அஜுவப் பொருள்களின் இயல்பை விளக்குகிறார்.
சமணர்களின் ஒழுக்கமாக ஐந்து மா விரதங்களைப் பற்றிய கூறுகளில்.அகிம்சா பரமோதர்ம என்பது சமணர்களின் அடிப்படையான தர்மம் ஆகும். அது அகிம்சையை போதிக்கிறது. இரண்டாவதாக தீமை பயக்கும் சொற்களை கூறாமை ,அதாவது வாய்மை என்று கூறுகிறார். எவ்வளவு அற்பமான பொருளாய் இருந்தாலும் அதை அதற்குரியவர் கொடுத்தார் என்று எடுத்துக் கொள்ள மனதினாலும் நினையாதிருத்தலை கல்லாமை என்கிறார். பிரம்மச்சரியம் தமிழர்களின் முக்கிய கூறுகளில் ஒன்று அதேபோல முற்றும் துறத்தல் பொருளை பற்றற துறத்தல் எனும் அவாவறுத்தல் என ஐந்து கூறுகள் தமிழர்களின் ஒழுக்க நிலைகளை நமக்கு தெரிவிக்கிறது.
வடநாட்டில் தோன்றிய சமண சமயம் தமிழகத்தில் கி.மு மூன்றாம் நூற்றாண்டில் பத்திரபாகு முனிவரின் சீடராகிய வைசாக முனிவரால் தமிழ்நாட்டில் சமண சமயம் பரவ செய்யப்பட்டது. பாண்டிய நாட்டில் காணப்படும் மதுரை மாவட்டத்தில் காணப்படும் பிராமி கல்வெட்டு எழுத்துக்கள் சமணரால் எழுதப்பட்டவை .வடநாட்டிலிருந்து தென்னாடு வந்த பன்னீராயிரம் சமணத் துறவிகள் மைசூரில் தங்கி மதக் கொள்கைகளை பரப்பினர். சந்திரகுப்த மௌரியன் அரசன் காலகட்டத்தில் தான் இலங்கையில் பாண்டுகாபய அரசனும் ஒரே காலத்தில் அரசாங்கத்தால் இலங்கையிலும் மதம் பரவியது. இவ்வாறு சமண சமயம் தென் தமிழகத்திலும் பரவியது குறிப்பிடத்தக்கது. அதற்கு சான்றாக கல்வெட்டுகள் குகை ஓவியங்கள் சமணர் மலைகள் இன்றும் தமிழகத்தில் இருப்பது உண்மையாக இருக்கிறது.
சமயப் போர் என்பது பிராமணர்களுக்கும் சமணர்களுக்கும் இடையில் ஏற்பட்டது .சோழநாட்டில் கௌசிகன் எனும் வைதீக பார்ப்பனன் அதித்தன் பசுவின் கூறிய கொம்புகளால் குத்தி கிழித்து விட்டது. அப்போது உதவி வேண்டி சமணப்பள்ளி சென்ற போது.. அவர்கள் கொலை வேள்வி செய்பவனும் வைதீக பார்ப்பனனுக்கு உதவி செய்ய உடன்படாமல் தங்கள் பள்ளியிலிருந்து வெளியே அனுப்பி விட்டனர். இதிலிருந்து அங்கு பகைமை ஆரம்பித்தது. அதற்கு பின்பு பௌத்தருக்கும் சமணருக்கும் இருந்த சமய பகை எல்லாருக்கும் அறிந்தது. குண்டலகேசி நூலை பௌத்தர் இயற்றியதும் பௌத்த சமயத்தை கண்டிக்க நீலகேசி எனும் நூலை சமணர் இயற்றியதும் பௌத்த சமய சண்டைகளுக்கு காரணமாக அமைந்தன இவ்வாறு சிறு சண்டைகள் மத சண்டைகளாக மாறியது.
சைவம் வைணவம் வந்த பின்பு சமணத்தை அழித்து ஒழிப்பதற்கான வழிகளை கண்டறிந்தனர். கொள்கை ரீதியாக எதிர்கொண்டனர் என பல்வேறு காரணங்களை அடக்கி சமண மதம் பிற மக்களிடையே பரவும் வாய்ப்பை குறைத்ததால் சமண மதம் வலிமை குன்றியது. சமணர் பள்ளி தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் எங்கெங்கு உள்ளது என்பதனை பற்றிய முழு விவரமும் தரப்பட்டுள்ளன.
சமணம் குறித்து அறிய முற்படும் வாசகர்களுக்கு ஆகச்சிறந்த நூலாக இந்த நூல் விளங்குகிறது. இடையே வரும் சங்க பாடல்கள் தமிழர்கள் எழுதிய பாடல்கள் ஒவ்வொன்றாய் சொல்லி விளக்கமும் கொடுத்து.. இந்த நூல் ஒரு ஆய்வுக்குரிய சிறப்பு நூலாக மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் எழுதியுள்ளது பாராட்டுக்குரியது. ஒவ்வொரு பக்கங்களிலும் அவருடைய ஆய்வும் உழைப்பும் தெரிகிறது
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment