#Reading_Marathon2026
#26RM009
Book No:32/150+
Pages:-128
மூன்று காலங்களுக்குப் புறப்பட்டுச் சென்ற மூன்று ரயில்கள்
-தூயன்
சமகால எழுத்தாளர்களில் கவனிக்கத் தகுந்த எழுத்தாளர்களின் ஒருவர். அவரின் வலைதளங்களில் அவருடைய எழுத்துக்களை வாசித்த உந்துதலில் வாங்கிய புத்தகம் இது. தலைப்பு வித்தியாசமாக இருந்தது. புத்தக அளவு பயமுறுத்தாமல் குறைவான பக்கங்கள் இருந்தது. நுண்கதைகளை நான் எப்போதும்.விரும்பி வாசிப்பேன். அது CBSE பாடப்பிரிவில் அதிக மதிப்பெண் எடுக்கும் சிரத்தை உடையது.கூர்மையான சொற்களும் இறுக்கமான நடையும் அவசியம். குறைவான பக்கங்களில் எடுப்பு தொடுப்பு முடிப்பு அவசியம்.
வயதான முதியவர் ஒருவர் சாலை விபத்தில் அடிபட்டு இறந்துவிட்டார்.
பயணிகள் சிலர் ஓரமாக தூக்கிவைத்து விடுகின்றனர். இதற்கு இடையே மீதிப்பணத்தை முதியவரிடம் கொடுக்க டீக்கடை பையன் வந்து பாக்கெட்டில் பணம் வைக்கிறான்.இதுதான் சூழல். கும்பலுக்கு எப்போதுமே வேடிக்கைதான் என பிரபல வரி உண்டு. இதை தன் எழுத்து சாகசத்தில் படைத்திருக்கிறார்.
"கூட்டம் வட்டச்சுருள்போல மனித உடல்களால் சுற்றியுள்ளது. அவனுக்கு உள்ளே நுழைந்து அதன் மையத்தை அடைவதில் ஆர்வம். ஒவ்வொரு வட்டமாக வளைந்து மையத்தை நெருங்குகிறான் மையத்தில் யாரும் இல்லை. மையம் வெறும் காலியிடம்தான். மொத்தக் கூச்சலும் மையத்துக்கு வெளியேதான். மையம் அமைதியாக இருக்கிறது. அங்குதான் அவர்கள் பேசிக்கொள்ளும் விபத்து நடந்திருக்க வேண்டும்" என சிறுவன் பார்வையில் கதை வார்த்தையில் நம்மையும் உள்ளே நுழைக்கிறது.
புகை வண்டியில் ஏறும் படிமத்தை அழகிய சொற்களில் காட்சிப்படுத்துகிறார் /வண்டி புறப்பட இன்னும் இரண்டு மணிநேரம் இருக்கிறது. அதுவரை இடத்தைப் பிடிக்க நிறைய சமரசமற்ற நிர்பந்தங்களும் தர்மசங்கடங்களும் பொய்ப் பித்தலாட்டங்களும் வெளிவரப்போகிறது. புஜபலபராக்கரமங்களை வெளிப்படுத்தும் பெண்களையும் மல்யுத்தத்திற்குத் தகுதியான ஆண்களையும் இனிப் பார்க்கலாம். குழந்தையுடன் ஏறுகிறவர்களுக்கு உரக்கப் பேசி இடத்தைப் பிடிக்கும் உரிமை உண்டு. பறிபோன அதிர்ஷ்டத்தை மொழி தெரியாதவர்களிடம் இழந்ததற்கு இவ்வுலகைச் சலித்துக்கொள்ள வேண்டியிருக்கும். கதவோரங்களில் வசதியாக உட்காரவும் காற்றை வாங்கவும் பொறுமையும் சங்கோஜமும் அவசியம். தண்ணீர் குடிக்காமலிருந்தால் ஏழு கடல் ஏழு மலை தாண்டிக் கழிவறை அடைவதை நிறுத்த முடியும். இப்படி ஆளுக்கொரு மனச்சொற்களால் வண்டியை நகர்த்த முடிவெடுத்தோம்/ வண்டியில் நாமும் அமர்ந்திருப்பதை உணர வைத்திருப்பார்
கடலில் இறந்து கரை ஒதுங்கிய பெண்ணின் ஆடையில் சிக்கிய மீனும் இறந்திருந்தது. அவள் விளையாடிய நடந்த காலடித் தடங்களை அழித்தது தவிர வேறு எதுவம்தெரியாது என அலைகள் புலம்புவதாக நுண்கதை ஒன்று படிக்கும் போது நம்மையும் ஒன்ற வைக்கும்.சிறிய கதைக் கருவை நுட்பமான விவரிக்கும் முறை சலிப்பின்றி வாசிக்க வைக்கிறது. அவை சாதாரண கதையாக நிகழ்வாக, செயலாக இருந்தாலும் கூட.
செவிலித்தாய் கேள்விப்பட்டிருப்போம். நவீன காலத்தில் வாடகைத்தாய்க்கு தான் தேவை அதிகம்.அப்படியாக குழந்தையின்மை தம்பதியர் வாடகை த்தாயை தேடிச் செல்லும் குறுங்கதை. இறுதியில் ஷேர் ஆட்டோ போல கட்டுபடியாகும் என பேரம் பேசி விடுவது யதார்த்தம். வட நாட்டு பெண்கள் தான் இதற்கு அதிகம் தயாராக உள்ளனர் என்பதும் புதிய செய்தி. தெய்வமே நீங்க இங்கயும் வந்திட்டீங்களானு நினைக்கத் தோனுது.
படிப்பு முடிந்து செல்லும்.மூவரும் ஆல்ஃபா கடிகாரம் கட்டிச் செல்கின்றனர்.மூன்று ரயில்களில் வெவ்வேறு பாதைகளில் செல்கின்றனர். மூன்று ரயில்கள் வருகிறபோது கடிகார மணி ஓசை கேட்கும். அப்போது ரயிலைன்நிறுத்தி சந்திப்பதென்பது திட்டம். அவ்வாறு நடந்ததா அவ்வாறு நிகழ்ந்தபோது ஏற்பட்ட உணர்வை யதார்த்தமாய் சொல்லியிருப்பார்.சஸ்பென்சுடம் கூடிய எதிர்பார்ப்பு நம்மையும் தொற்றிக் கொள்கிறது. இக்கதைதான் புத்தக தலைப்பிற்கான கதையும் ஆகும்.
காலம் குறித்த கதைக்கரு அதிகம் தொட்டு பேசியுள்ளார்.இக்கதைகள் அனைத்தும் அன்றாட வாழ்வில் மனதில் தோன்றும் சாதாரண பக்கங்களை இக்கதை தொடுகிறது. சிலவற்றில் காட்சி படிமத்தை விளக்குகிறது."அடக்குவதுதான் அதிகாரத்தின் முதல் வெற்றி" என வர்க்க தத்துவத்தையும் பேசுகிறது.
'உலகத்தின் தேவதைகளெல்லாம் மறைந்துபோன பிறகு கடைசியாக, சந்தோஷம், துக்கம் என்ற இரு தேவதைக் குழந்தைகள் பிறந்தன எனும் துவக்க வரி கடைசி தேவதைகள்.கதைக்கான நல்ல துவக்கம்.
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு