உய்வு
..........
நூலின் துணையோடு வானில் உயர்ந்தது காற்றாடி.
"நான் எவ்வளவு உயரத்தில் இருக்கிறேன்" என்று பெருமைப்பட்டுக் கொண்டது. இனி நூல் எதற்கு என்று அதை அறுத்துக் கொண்டது.
சிறிதுநேரத்தில் முள் மரத்தில் விழுந்து உருக்குலைந்தது காற்றாடி.
இதன் கதை தெரிந்த முள்மரம் சொன்னது:
" ஏற்றி வைத்தவனை மறக்கிறவன்
இறக்கி வைக்கப்படுவான்"
- காசி ஆனந்தன்
No comments:
Post a Comment