Wednesday, 22 March 2017

எஸ்.ரா

S. ராமகிருஷ்ணன் :

" ஒரு வீட்டில் ஒரு மெழுகுவர்த்தி இருக்கிறது . அது தனியாக இருக்கிறது ,அதை ஏற்றப்படும் நேரத்தை தவிர அதை யாரும் கண்டுக்கொள்ளவே இல்லை...திடீரென காற்று பலமாக அடிக்கிறது மெழுகுவர்த்தி அனைந்து விடுகிறது ..
மறுபடியும் மெழுகுவர்த்தி தனிமையில் போகிறது ..தனிமையில் இருப்பது மெழுகுவர்த்திக்கு பயமாக இருக்கிறது ....

அது துணைக்கு இன்னொரு மெழுகுவர்த்தியை நாடினது இல்லை ..அதன் பயத்தை யாரிடமும் சொல்லாமல் எரியும் நேரங்களில் எல்லாம் அது ஆடிக்கொண்டே இருக்கிறது ...
அவ்வீட்டில் இருக்கும் சிறுவன் மெழுகுவர்த்தியின் முன்னால் தன் கை விரல்களை எல்லாம் வைத்து மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் சுவரின் மீது ஒரு முயலை உருவாக்கினான் ... மயில் , மான் என்று பலப்பல மிருகங்களை எல்லாம் உண்டு பண்ணுகிறான்...

மெழுகுவர்த்திக்கு ஆச்சர்யமாக இருந்தது, எங்கிருந்து வந்தது இந்த மிருகங்கள் எல்லாம்...உடனே மெழுவர்த்தி நினைத்தது தான் தனி ஆள் இல்லை தன்னுள் தான் இந்த மிருகங்கள் எல்லாம் இருக்கிறது...தனக்குள் இருக்கும் நிழலின் வழியாக தான் இந்த உலகம் மறுஉலகமாக மாறுகிறது ...

சிறுவனுக்கு நன்றி சொல்வது போல சந்தோஷமாக சுடரை அசைத்து விட்டு சொன்னது உலகில் யாரும் தனிமையில் இல்லை மாறாக நமக்குள் நிறைய இருக்கிறது ...நாம் தான் அதை கண்டுகொள்வது இல்லை ..கண்டுகொள்வதற்கு யாரோ ஒரு விளையாட்டு சிறுவன் போதும்...

(கற்பனை இருந்தால் வாழ்வு ருசிகரமாக இருக்கும்) "

No comments:

Post a Comment