கற்றதும் பெற்றதும்-59
*மணி
புதுமைப்பித்தன் கதைகள்-1
சின்ன வயசிலிருந்து புதுமைப்பித்தன் கதைகளெனில் இஷ்டம்.ஏனா தமிழ் துணைப்பாடத்தில் இவரின் கதை மட்டும் கொஞ்சப் பக்கம் இருக்கும்.அப்புறம் விபரம் தெரிந்து இவரின் 103 கதைகள் முழுமையாய் 2016 ல் வாசித்தபோது மகாகலைஞன் என உணர்ந்தேன்."கட்டிடங்களை உறங்க வைத்து விட்டு விழித்திகொண்டிருக்கும் வாட்ச்மேன் போல் இவரின் கதைகள் நம்மை உறங்காமல் அசை போட வைக்கும்.
அவ்வமயம் சில கதைகள் உங்கள் பார்வைக்கு
1)சாளரம்
இரவுப் பேருந்தில் சென்று கொண்டிருக்கும்போது நடக்கும் உரையாடலில் ஒட்டுமொத்த சமூகத்தையும் சாடியிருப்பார். உரையாடலில் பெஸன்ட் அம்மையார் அஞ்சலிக்கூட்டம் நடைபெறுவதை கடக்கும்போது மதத்தை பின்பற்றாத ஸ்திரி என்றும், அண்டை மனிதர் இறப்பு குறித்து பேசும்போது.. தாழ்ந்த ஜாதி பையன் ஒருவன் மேல தூண் கல் விழுந்து "பூட்டான்" னு சொல்வார் ஒருத்தர். குற்றால வெள்ளத்தில் ஆறு பிராமனாள் போய்ட்டாளாம் என மரியாதையா சொல்வார்.
இப்படியே பேச்சு விலைவாசி பக்கம் போய் கலைந்துபோவார்கள்.அன்றைய ஜாதிய சமூகத்தை மனிதன் இறப்பில் கூட ஜாதி பார்ப்பதை தனக்கே உரிய பாணியில் சொல்லியிருப்பார்.
2)ஆற்றங்கரை பிள்ளையார்
ஆற்றில் வெள்ளம் வருவதால் பிள்ளையார் அடிக்கடி மூழ்கிடுவார்.வயதானவர் இதற்கு மனம் வருந்தி மேடைகட்டி அரச/வேப்ப மரத்தை நட்டுவைக்கிறார். மழையில் மரம் தண்ணீர் சொட்டிக்கொண்டே இருந்ததால் பிள்ளையாருக்கு நடுக்குவாதம் ஏற்பட்டது.பின் கிளை வெட்டியபிறகு இன்னும் இடைஞ்சலானாது.ஒரு புயலில் மரமிரண்டும் பிள்ளையார் மீது சாய சாமியா?மரமானு? விவாதம் நடக்கும்.
இதுபத்தி சுவையா சொல்லி முடித்திருப்பார்
3)சங்குத்தேவன் தர்மம்
பல முறை இக்கதை சொல்லப்பட்டிருக்கிறது. முறுக்கு பாட்டி முத்தாட்சி தன் மகள் திருமணத்திற்கு கொல்லனிடம் நகை செய்து வாங்கிகொண்டு திரும்பும்போது பொழுது சாய்ந்துவிடுகிறது.இரவில் பயம்.காட்டு வழியில் சங்குத்தேவன் களவாடி விடுவான் என பயம்.தூரத்தில் தெரியும் கரிய உருவத்தை கூப்பிட்டு வழித்துணைக்கு தன் கஷ்டத்தையும்,மகள் திருமணத்தை சொல்லிச் செல்கிறாள்.ஊர் வந்தவுடன் விடைபெறும் போது வந்தவன் நூறு ரூபாய் தந்து,பேரனுக்கு என் பெயர் வை எனச் சொல்லித்திரும்புகிறான்.
பெயர் கேட்கிறாள் பாட்டி..சங்குத்தேவன் என்கிறான்.
4)பொன்னகரம்
பலராலும் மேற்கொள் சொல்லப்படும் கதை.ஒன்றரை பக்கத்தில் ஒரு புரட்சியை சொல்லியிருப்பார்.
அம்மாளுவின் கண்வன் முருகேசன் ஊதாரி.ஒரு விபத்தில் குதிரை வண்டியுடன் அடிபட்டு வீட்டில் கொண்டுவந்து போட்டனர்.
அம்மாளுவிற்கு கூலிபோட இரு நாளாகும். தண்ணீ எடுக்கச் செல்லும்போது அம்மாளுவின் மேல் கண்ணாய் இருந்த சந்திரனுடன் இருளில் மறைகிறாள்.முக்கால் ரூபாய் சம்பாதுத்துவிட்டாள்.ஆம். புருசனுக்கு பால் கஞ்சி வார்க்கத்தான்.
என்னமோ கற்பு,கற்பு என கதைக்கிறீர்களே! இதுதான் ஐயா பொன்னகரம்!
5)திருக்குறள் செய்த திருக்கூத்து
துப்பறியும் ரகசியப் போலீஸ் வித்தல்ராவ்..துப்பறியச் செல்லுமிடத்தில் நோட்டுப்புக்கிலிருந்து கிழித்து எறியப்பட்ட காகிதத்தில் பிரித்துப்படிக்கிறான்.அதில்
துப்பார்க்கு துப்பாய் துப்பாக்கி
துப்பர்க்கு துப்பாய் தூ மழை
இதை ஒரு சதித்திட்டமென நினைத்து புலனாய்வு செய்து எப்படி அவமானப்பட்டார் என்பதுதான் கதை
6)கட்டில் பேசுகிறது
இரண்டரை பக்க கதை.அதை சுவாரஸ்யமுடன் சொல்வது சவால்தான்.அதுதான் புதுமைப்பித்தன்.கவர்மென்ட் ஆஸ்பத்திரி கட்டில் நோயாளியுடன் பேசுவது தான் கதை.இதுவரை இறந்த்வர்கள் லிஸ்ட்டை வாசித்து பீதி கிளப்புகிறது.இறுதியில் டாக்டரின் பூட்ஸ் சத்தம் கேட்பதுடன் முடித்திருப்பார்.டாக்டர் மீது மரண பயம் வருவதை நம்மையும் உணர வைத்திருப்பார்
7)மோட்சம்
ராமு எனும் 8வயசு பையன் பள்ளியில் லேட் ஆக சென்றதால் அடிவாங்குகிறான்.பூகோள பாடம் சொல்லத் தெரியாததால் அடிவாங்குகிறான்.வெளியே உட்கார்ந்து படிக்கும்போது தூக்கத்தில் இவன் வாத்தியாரை அடிப்பது போல் கதை
8)உணர்ச்சியின் அடிமைகள்
தம்பதியாய் இருக்கும்போது..
மகன் பிறந்த போது..
பேரனுடன் விளையாடும்போது.. என மூன்று வயதில் இருவரின் மனதில் ஏற்படும் உணர்ச்சிகளை எழுதியிருப்பார்.
9)நிகும்பலை
உண்மையில் இது மனதிற்கு மிக நெருக்கமான கதை.பரிட்சைக்கு படிக்கும் மாணவர்களை பற்றிய கதை.பி.ஏ பரிட்சைக்கு தயாராகும் நால்வரும் படிக்கும்போது ஏற்படும் சுவாரஸ்யம் தான் கதை.பரிட்சை முடிந்து பெல் அடிக்கும்போது போர் முடிந்தது நாளை வா என விடுவிப்பது போல் தேர்வறை இருக்கிறதாக எழுதியீருப்பார்.
10) நியாயம்
தேவ இரக்கம் நாடார்.பெஞ்ச் மாஜிஸ்ட்ரேட்.காயம்பட்ட குதிரையை வைத்து வண்டி இழுக்க வைத்த குற்றத்திற்கு சொள்ளமுத்து வை தண்டிப்பார் எவ்வளவு கெஞ்சியும் மன்னிக்க மாட்டார். இரவு கர்த்தரிடம் தாம் செய்ததற்கு பாவமன்னிப்பு கேட்பது போல் முடித்திருப்பார்.
-தொடரும்
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment