எவ்வளவு முயன்றாலும்
காமிரா முன்
புன்னகை செயற்கையாகிறது
எப்படித் தவிர்த்தாலும்
கண்ணாடி முன்
புன்னகைக்கத் தோன்றுகிறது
-சுகுமாரன்
#பெண்களின் அழுகை பலவீனமாக புரிந்துகொள்ளப்படுகிறது. உண்மையில் அது கோபத்தின் வெளிப்பாடு. 'அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர்' என்பது வள்ளுவர் வாக்கு. ஆண்களை போல் கோபப்பட்டு வன்முறையில் இறங்காமல் ஆற்றாமையில் அழுகிறாள் பெண்
-ஞாநி
#முளைச்சு மூணு இலை விடல" அதுக்குள்ள என்ன என அடிக்கடி கேட்டிருக்கிறோம்.
மூணு இலை கணக்கு என்பது விதை முளைத்ததும் செடி நிச்சயம் பிழைத்துவிடும் என்ற நிலை. மூணாவது இலைவிட்ட பிறகு பராமரிப்பு இருந்தால் போதும். பேரிடர் வந்தாலொழிய அழியும். இல்லையேல் நன்கு வளரும் என்பதற்கான குறியீடு
#எங்கோ ஏதோர் குழந்தை துயருறுகையில்
தம் பிள்ளைகளை இழுத்து
அருகில் போட்டு படுத்துக்கொள்வது
ஒவ்வோர் தகப்பனின்
ஒவ்வோர் தாயின்
அனிச்சை
மற்றும்
எதற்கோ தேற்றிக்கொள்ளும் ஆறுதல்.
-யாத்திரி
No comments:
Post a Comment