Saturday, 6 February 2021

கண்ணதாசன்

உடலழகைக் காப்பாற்ற உயிரை விட்டேன்
உரலழகைக் காப்பாற்ற உலக்கை விற்றேன்

படையழகைக் காப்பாற்ற போரை விட்டேன்
பாத்திரத்தைக் காப்பாற்ற பாலை விற்றேன்

கடையழகைக் காப்பாற்ற சரக்கை விற்றேன்
கவியழகைக் காப்பாற்ற கருத்தை விற்றேன்

குடையழகைக் காப்பாற்ற மழையின் போது
குடைக்கே நான் குடையாகிக்
குனிந்து சென்றேன்

-கண்ணதாசன்

No comments:

Post a Comment