விளம்பரம்
சோகமாக ஓர் இளைஞன் வீடு திரும்புகிறான். அவன், அம்மாவை நிமிர்ந்து பார்க்க,
அம்மா:என்னடா ஆச்சு?
இளை:96தாம்மா கெடச்சுது. அம்மா விசித்து விசித்து அழத் தொடங்க,காமிராவின் குறுக்கே ஒரு சாத்விகமான ஆசாமி தெரிந்து, கண்ணாடியைக் கழற்றிவிட்டு, உங்களை நேராகப் பார்த்துப் பேசுகிறார்.
பையன் மார்க் வாங்கலையா? கவலைப்படாதீங்கோ. எங்க மகாத்மா காந்தி பொறியியற் கல்லூரில வீட்டின் பேர்லயும் தங்க நகைகளின் பேர்லயும் ‘ஸீட்’ கொடுக்கிறோம். இப்பவே புக் பண்ணிடுங்கோ...’
-சுஜாதா
No comments:
Post a Comment