Monday, 25 December 2023

நெக்லஸ்

நெக்லஸ்
-மாப்பசான்

நேற்று காலை நேர அவசரத்தில் படித்த கதை இன்னும் மனதில் எண்ணற்ற கேள்விகளை

மிகவும் சாதாரணமான கதை 'நெக்லஸ்' ஆனால் சொல்லிய செய்தி ஒரு அதிர்வை ஏற்படுத்தியது.

"ஒரு பெண் தன் தோழியிடம் இரவல் நகை ஒன்றை வாங்கி போட்டுக் கொண்டு திருமணத்திற்கு போகிறாள்..அது ஒரு வைர நெக்லஸ். தொலைந்து போய்விடுகிறது. பதறிப்போன அவள் எங்கெங்கோ தேடிப்பார்க்கிறாள். எங்கும் கிடைக்காதுபோகவே அதேப் போலொரு நெக்லஸை வாங்கி கொடுத்துவிடலாமென கடையில் கேட்கிறாள். அதன் விலை அவளது சேமிப்பு, உடைமை, சொத்து அனைத்திற்கும் சரியாக இருக்கிறது. அனைத்தையும் விற்று அந்த நகையை வாங்கித் தோழியிடம் கொடுத்துவிட்டு அந்த ஊரைவிட்டு எங்கோ போய் விடுகிறாள்.

ஐந்து ஆண்டுகளுக்குப் பின் இரு தோழிகளும் ஒரு பொது இடத்தில் சந்திக்கிறார்கள். இவள் மிகவும் வயதானவளாக, நோயாளி போல் காணப்படுகிறாள். தோழிக்கு ஆச்சரியம்..."ஏன் இப்படி இருக்கிறாய்?" என அதிர்ந்துபோய் கேட்கிறாள். சிறிது நேரத்தில் உண்மை வெளிப்படுகிறது.

"அடப்பாவி... என்னிடம் நடந்த விஷயத்தை சொல்லியிருக்கக் கூடாது ? அது ஒன்றும் ஒரிஜினல் நகை இல்லை. கவரிங்..." என்று தலையிலடித்துக்கொண்டு அவளை வீட்டிற்குக் கூட்டிப்போய் அவள் வாங்கிக்கொடுத்த விலையுயர்ந்த நெக்லஸை அவளிடமே திருப்பித் தருகிறாள் தோழி.

கதை முடிந்துவிட்டது!

ஒரு நல்ல கதை முடியும் இடத்தில்தான் உண்மையில் ஆரம்பமாகிறது! நெக்லஸ் அவளிடமே வந்து விட்டது! ஆனால், அவள் இழந்த வாழ்க்கை? இளமை? நிம்மதி? '

அவள் அற உணர்வை எண்ணி வியப்பதா, அவள் ஏமாற்றத்தை எண்ணி பரிதாபப்படுவதா எனத் தெரியவில்லை.மனிதர்கள் மனிதர்களுக்கு உண்மையாக இருக்க நினைத்ததை எண்ணி பெருமிதமும் பட வைக்கிறது

-மணி

No comments:

Post a Comment