புத்தகங்கள்.
எந்தப் புத்தகமும் என்னை முட்டாளென்று
இழிவுபடுத்தியதேயில்லை!
மாறாக,என் அறிவைக் கிளறி விட்டது!
எந்த புத்தகமும் என்னைப் பைத்தியமென்று
பறைசாற்றியதேயில்லை!
மாறாகத் தெளிவை எனக்குத் தேடித் தந்தது!
எந்தப் புத்தகமும் என்னைப் பயன்படாதவனென்று விலக்கி வைத்ததேயில்லை!மாறாக,என் தோள்களைத் தூக்கி விட்டது!
எந்தப் புத்தகமும் எனக்குத்
துரோகமிழைத்ததேயில்லை!
மாறாக,நேசத்தை நெஞ்சில் நிரப்பியது!
எந்தப் புத்தகமும் எனக்குப் பகைமையைப்
படிப்பித்ததேயில்லை!மாறாக, நாளும் நட்பை வளர்த்தது!
எந்தப் புத்தகமும் புகைபிடிக்கவோ, மதுவருந்தவோ என்னை அழைத்ததேயில்லை! மாறாக,
ஒழுக்கத்தின் உயர்வை ஊட்டியது!
எந்தப் புத்தகமும் திருடவோ, பொய் சொல்லவோ எனக்குக் கற்பித்ததேயில்லை!
மாறாக, உழைப்பையும், உண்மையையும் ஒருங்கே உணர்த்தியது!
எந்தப் புத்தகமும், எனக்கு அநாகரிக வார்த்தைகளை அள்ளிக் கொடுத்ததேயில்லை!மாறாக,அன்பின் சொற்களையே அளித்தது!
மனிதர்களை விட அதிகமாக மானுடம் பேசுவதும், வளர்ப்பதும் புத்தகங்களாதலால்,
புத்தகங்களோடு பழகுங்கள்!
-படித்தது
No comments:
Post a Comment