#கற்கை_நன்றே_113
“Things won are done, joy’s soul lies in the doing”- Cressida,
’ by Shakespeare
"வெற்றி பெற்றவைகள்
செயல்களின் மூலமே முடிந்தது., மகிழ்ச்சியின் ஆன்மா செயல்களில் உள்ளது" -ஷேக்ஸ்பியர்
வெற்றி, தோல்வி என்பவை அவரவர் மனப்பான்மை
வெற்றி பெற முயற்சி செய்'' (Motivate to win) என்ற நூலின் ஆசிரியர் ரிச்சர்டு டென்னி
"நொண்டிச்சமாதானங்களைத் தவிர்த்துத் தீவிர முயற்சிகளை மேற்கொள். வெற்றி நிச்சயம்' என்கிறார். அவர் மேலும் தமது நூலில் வெற்றியாளனின் மனோபாவமும், தோல்வியாளரின் அவநம்பிக்கைச் சிந்தனைகளும் பின்வரும் குறிப்பிட்ட வகைகளில் வேறுபடுகின்றன என்கிறார்.
வெற்றி பெற்றவன் தவறு செய்தால், ""நான் தவறு செய்தேன்'' என்றான். தோல்வியாளன் "" அது என் பிழை அல்லா'' என்கிறான்.வெற்றியாளன் கடுமையாக உழைக்கிறான். நிறைய நேரமும் இருக்கிறது. தோல்வியாளன் எப்போதும் தான் பிசியாக இருப்பதாகச் சொல்லி தோல்வி காண்கிறான்.
வெற்றியாளன் பிரச்னையின் நடுவில் மத்தியில் செல்கிறான். தோல்வியாளன் நகராமல் பிரச்னையைச் சுற்றி
நின்று கொண்டிருக்கிறான்.
வெற்றியாளன் தவறு நேர்ந்ததற்கு வருந்துகிறான். தவறைத் தவிர்க்கிறான். தோல்வியாளன் தவற்றுக்கு "சாரி சொல்கிறான். ஆனால் மீண்டும் அதே தவறைச் செய்கிறான்.
5. எது குறித்துப் போராட வேண்டும். எந்த விஷயத்தில் சமாதானம் செய்து கொள்ள வேண்டும் என்று அறிந்தவன் வெற்றியாளன். சமாதானம் செய்து கொள்ள வேண்டிய இடத்தில் சண்டையும், சண்டை செய்ய வேண்டிய விஷயத்தில் ஒதுங்கி நின்று இழப்பும் ஏற்படுத்திக் கொள்வது தோல்வியாளனன் வழக்கம்.
வெற்றி, தோல்வி என்பவை அவரவர் நல்ல மனப்பான்மையையும், சிந்தனைத் தெளிவையும் போட்டிகளில் முன்னதாக வர வேண்டும் என்கிற தணியாத ஆர்வத்தையும் பொறுத்து அமைகின்றன.
கிரிக்கெட்டில், தற்போது அதிகம் நேசிக்கபடுவது T20 தான் ! டெஸ்ட் தொடரை நல்ல கிரிக்கெட் ரசிகன் மட்டுமே பார்க்கிறான். பொது மக்கள் அதிகமாக டெஸ்ட் தொடரை விரும்புவதில்லை அல்லது பார்க்க நேரம் இல்லை.
T20 கிரிக்கெட் ஆடும் போது, பேட்ஸ்மேன் எந்த பந்தயும் விட கூடாது. எவ்வளவு முடியுமோ அவ்வளவு அடித்து ஆடி ரன்கள் சேர்க்க வேண்டும். நல்ல பந்து, மோசமான பந்து என்றில்லை. ஒரே அடி தான்.
ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்தை எப்படி விட வேண்டும் என்பது ஒரு கலை. எல்லாருக்கும் வராது. ஆனால் நீங்கள் அடிக்க வேண்டும் என்றே சில பந்துகளை வீசுவார்கள். பந்தை அடிக்கலாமா, வேண்டாமா என்பது திறமையான decision making. மோசமான பந்தை அடிக்க வேண்டும். நல்ல பந்தை விட்டு விட வேண்டும்.
"சந்தேகம்" பந்தை அடிக்க விடாது. எந்த மேட்ச், எந்த பந்து, தற்போது ஸ்கோர் என்ன நிலை, நம்மிடம் விக்கெட் எப்படி இருக்கிறது, எதிரே பந்து வீச்சில் எந்த பவுலர் இருக்கிறார், இதெல்லாம் யோசிக்கும். குழப்பும்.
கொடுக்கப்பட்ட ஒரே சூழ்நிலை தான். ஆனால் "அறிவு" பந்தை அடித்து வெற்றிக்கு அடி கோலும். எந்த விதமான சூழ்நிலை அழுத்தத்திற்கும் உட்படாது. அதை உள்வாங்கி கொள்ளாது. எப்பொழுதும் Cool" ஆக இருக்க வேண்டும் என்கின்றனர்
நற்காலை
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment