'கடவுள் நம்பிக்கை எனக்கில்லை? தப்பா, சரியா அண்ணா?' என நேற்று கூட்டத்தில் ஒரு தம்பி கேட்டான்
'அதுல என்ன தப்பு? நீங்கள் நம்புறதுக்கு உண்மையா இருங்க. மகத்தான ஆளுமைகளான புத்தர், இங்கர்சால், ரஸ்ஸல், நேரு, பெரியார் இவர்களுக்கெல்லாம் கடவுள் நம்பிக்கை இல்லை. புத்தமும், தம்மமும் படிங்க. ரிச்சர்ட் டாகின்ஸ் எழுதின God delusion படிங்க. எனக்கும் நம்பிக்கையில்லை' என்றேன்
இப்பொழுது தான் கவனித்தேன் விபூதியோடு மேடையில் உரையாற்றி இருக்கிறேன். நண்பனின் தாத்தா ஆசையோடு வைத்ததை அழிக்கவில்லை. மேடையில் எனக்கு நம்பிக்கையில்லை என சொன்னதை கூட்டத்தினர் பொய் என எண்ணியிருக்கலாம்
No comments:
Post a Comment