Friday, 20 June 2025

எல்லாரும் சந்தோஷமாயிருக்கணும்.எல்லாரும் திருப்தியாயிருக்கணும். எத்தனையோ கிடைக்கும்.கிடைக்காம இருக்கும். எத்தனையோ வரும். எத்தனையோ போகும். அதுக்காக சந்தோஷமா இருக்கறதை விடப்படாது. முயற்சி பண்ணி சந்தோஷமாக இருக்கக் கத்துக்கணும்.நூறு இல்லாம இருக்கலாம். பத்து இல்லாம இருக்கலாம்.காசு இருக்கலாம். இல்லாம இருக்கலாம். வெயில் கொளுத்தலாம். மழை கொட்டலாம். எதாயிருந்தாலும் எல்லாரும் முயற்சி பண்ணி சந்தோஷமா இருக்கப் பாடுபடணும். சந்தோஷமா இருக்க முயற்சி பண்ணணும். சந்தோஷமாத்தான் இருப்பேன் பிடிவாதமாக இருக்கணும்.தி.ஜானகிராமன். மாப்பிள்ளைத் தோழன் சிறுகதையில்.

Sunday, 1 June 2025

நாள்பட்ட சீக்கு - க்ஷயரோகம். இளைப்பும், தகையுமாக சருமம் விம்மி விம்மித் தணியும். நெஞ்சுக் கூட்டுக்குள் சலங்கை குலுங்குகிற மாதிரி 'கொல கொல'வென்று இரைச்சல் போடுகிற சளி. இருமல் வந்தால், சூறாவளி மாதிரி தான். வாடிப்போன சோளப்பயிரைச் சுழற்றியாட்டுகிற மாதிரி ஓர் உலுக்கு உலுக்கியெடுத்துவிடும் அய்யாவை.கட்டிலைச் சுற்றி ரொம்ப நாளாக ஒருவீச்சம். துப்பிய சளியின் துர்நாற்றம். நிரந்தர ஈர மொய்ப்பு. மணல் நிறைந்த சிரட்டை பூராவும் சளியின் கருமை.எலும்புக்கூட்டு மேலே நனைந்த காகிதம் போல படிந் திருந்தது, வெளுத்த சருமம். நிறைய நரைத்த ரோமங்களும், சுருக்கங்களும், அதில்.குத்துக்கால் வைத்து உட்கார்ந்தால்... முழங்கால் உயரத் திற்குள் மொத்த உடலே முடங்கிக்கிடக்கும். தசையில் அசையும்போதுதான் உயிர் இருப்பதே தெரியும்.-மேலாண்மை பொன்னுசாமிஒரு சிறுகதையின் ஆரம்பித்திலிருந்து இறுதி வரை இப்பிடி வார்த்தைகளில் காட்சிப்படுத்தும் கரிசல் காட்டு எழுத்து அரக்கர்