தமிழில் இரு வகை மொழிபெயர்ப்பாளர்களை நாம் கூர்ந்து வாசிக்கவேண்டும். கநாசு, த.நா.குமாரஸ்வாமி, பிரம்மராஜன், சாருநிவேதிதா, நாகார்ஜுனன், எஸ்.சண்முகம் ஆகியோர் ஒரு ரகம். இவர்களுக்கென்று ஒரு மொழிக்கொள்கையும் அதனால் உண்டாகிற வார்த்தை தெரிவுகளும் மொழிபெயர்க்கப்பட்ட பிரதிகளில் பிரதிபலிக்கும். கநாசு, குமாரஸ்வாமி, சாரு ஆகியோரின் பல மொழிபெயர்ப்புகள் தமிழில் தன் வயமாகி தமிழில் எழுதப்பட்ட பிரதிகள் போலவே செழுமைபெற்றிருக்கும். பிரம்மராஜன், நாகார்ஜுனன், சண்முகம் ஆகியோரின் மொழிபெயர்ப்புகளில் அந்நியத்தனமை அதிகமாகி அதனால் கவர்ச்சி பெற்று தமிழுக்கு புதிய வளங்களை சேர்ப்பவையாக அமையும். கா.திரவியம், வெ.ஶ்ரீராம், ஆர்.சிவக்குமார், ஜி.குப்புசாமி, சா.தேவதாஸ், லதா ராமகிருஷ்ணன், விசாலாட்சி ஆகியோர் இன்னொரு ரகம். மொழிபெயர்ப்புகள் மூலப்பிரதிகளிலிருந்து சிதையாமல் இருக்க இவர்கள் பிரயத்தனம் எடுத்துக்கொள்பவர்கள். கல்குதிரையில் குப்புசாமியின் மொழிபெயர்ப்பில் வெளிவந்திருக்கும் முராகமியின் 'விநோத நூலகம்' குப்புசாமியின் fidelity to the original textஇக்கு நல்ல எடுத்துக்காட்டு. புதிய மொழிபெயர்ப்பாளர்களில் கார்த்திகை பாண்டியன், அசதா, ஜார்ஜ் சாமுவேல் ஆகியோரை கவனித்து வாசித்துக்கொண்டிருக்கிறேன். நிராகரிக்கப்படவேண்டிய மொழிபெயர்ப்பாளர்கள் பட்டியல் ஒன்று இருக்கிறது. அவர்களைப் பற்றி எழுதி இந்த அழகான ஞாயிறு மதியத்தை கெடுத்துக்கொள்ள வேண்டாமே
No comments:
Post a Comment