Thursday, 10 November 2016

எஸ்.ரா வரிகள்- பாரத் பாரதி

*எனக்கு(ம்) மிகச்சரியாய் பொருந்தும் எஸ்.ரா.வின் வரிகள்:*
💥எழுத்தாளனாக எனக்கென உருவாக்கிய சிறுவட்டத்திற்குள். கொந்தளிக்கும் உணர்ச்சிநிலைகளுக்குள் வாழுகிற ஒருவனைப் புரிந்து கொண்டு அரவணைத்து அன்பு செலுத்தி இலக்கியத்திலும் வாழ்விலும் நிகரற்ற துணையாக என் மனைவி இருப்பது எனது நல்லூழ்.
💥வீட்டில் சந்தோஷமும் அன்பும் நிரம்பியிருந்தால் போதும் ஒரு மனிதனால் இந்த உலகை எளிதாக எதிர்கொள்ளவும் வெல்லவும் முடியும்.
💥ஆனால் ஆரம்பக் காலங்களில் நிறையக் கஷ்டங்களும் நெருக்கடியும் வறுமையும் இருந்தன. அதை நான் ஏற்றுக் கொண்டதை விடவும் அப்படிதானிருக்கும் வாழ்க்கை எனப் புரிந்து கொண்டு எனக்காக எவ்வளவோ விட்டுக் கொடுத்து மனஉறுதியோடு தைரியத்துடன் வாழ்க்கையை எதிர்கொண்டவள் என் மனைவி.
💥என்னைப் பார்க்க வேண்டி வீடு தேடி வரும் வாசகர்கள். பத்திரிக்கை. தொலைக்காட்சி நண்பர்கள். வெளிநாட்டிலிருந்து வருபவர்கள். எனப் பலருக்கு சிற்றுண்டியும் உணவும் கொடுத்து உபசரித்து, தேவைப்படும் உதவிகள் செய்து, நட்புறவோடு நடந்து கொள்வது அவளது இயல்பு.
💥எழுத்து மட்டுமே எனது உலகம் என மூழ்கிக்கிடப்பவன் நான். சினிமா, பத்திரிக்கை, புத்தகங்கள். உரைநிகழ்த்துதல், நாடகம், இணையம், எனப் பலதளங்களில் பணியாற்றுகிறவன்.
💥இந்தப் பணிகள் தொடர்பான சந்திப்புகள். நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்புச் செய்வது. பதிப்பகங்களுடன் தொடர்பு கொள்வது. புரூப் பார்ப்பது. வங்கி கணக்குவழக்கு, ஆடிட்டர். சினிமா ஒப்பந்தங்கள். படப்பிடிப்பு விபரங்கள். பயணத்திட்டங்கள், இலக்கியச்சந்திப்புகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான நினைவூட்டல் என அத்தனையும் செய்வது எனது மனைவி. அதுவே இப்போது அவளது முழுநேரவேலையாகிவிட்டது. அவள் படித்த கட்டிடக்கலை சார்ந்த துறையில் அவளால் இப்போது ஈடுபட இயலவில்லை.
💥இலக்கியம் உலகைப்புரிந்து கொள்ள வைப்பதுடன் உடன்வாழும் மனிதர்களின் முக்கியத்துவத்தையும் அன்பையும் புரிந்து கொள்ளச்செய்கிறது. ஒரு எழுத்தாளனாக எனது கிளைகள் வான் நோக்கி விரிந்திருக்கலாம். ஆனால் என்னைத் தாங்கும் நிலமாக, என் வேர்களாக இருப்பது வீடே!!!
-எஸ்.ராமகிருஷ்ணன்.

No comments:

Post a Comment