தனி...
கண்ணாமூச்சி
விளையாட்டு ஆரம்பமாயிற்று
அஸ்வின் பீரோ பின்னால்
ஒளிந்துகொண்டான்.
லாவண்யா கதவிற்குப் பின்னால்,
பிரித்வி, மகேஷ்
மாடிப் படிக்கட்டு கீழே ஒளிந்துகொண்டார்கள்.
கண்களைக் கட்டியபடி
கைகளைத் துழவியபடி
தேட ஆரம்பித்திருந்தான் கிருஷ்ணா
ஒளிவதற்கு மறைவிடமேதுமின்றி
தனியே சோகமாய் அமர்ந்திருக்கிறது
லாவண்யாவின் டெடிபியர் மட்டும்.
- கவி மாயாவி
No comments:
Post a Comment