Tuesday, 10 January 2017

முகுந்த் நாகராஜன்

"நான்தான் மின் விளக்கு" என்று
அறிவித்தாள் சிறுமி
மாறுவேடச் சுற்றில்.
தொப்பி அணிந்து அதன் மேல்
ஒரு பல்பு பொருத்தி இருந்தாள்.
மேலும் அவள் சொன்னாள்:
என்னை 1869-ஆம் ஆண்டு
அக்டோபர் மாதம் 9-ஆம் தேதி
தாமஸ் ஆல்வா எடிசன்
கண்டு பிடித்தார்.
அன்று முதல் நான் இந்த
உலகத்துக்கு ஒளி அளித்து வருகிறேன்.
என்னை ஈரக் கையால் தொடக் கூடாது
என்ற எச்சரிக்கையுடன் முடித்தாள்.
"அது சரி. இந்த பல்பு இப்போது
எரிகிறதா இல்லையா?" என்றாள்
நிகழ்சி நடதியவள்.
பதில் எதும் சொல்லாமல்
சிரித்தாள் மின்விளக்கு பிரகாசமாக.
முகுந்த் நாகராஜன்

No comments:

Post a Comment