நன்றி: சூர்யா
இல்லத்திற்குத் துறவி வந்திருந்தார்
வாழ்வின் புதிர்பற்றிக் கேட்டேன்
பவ்யமான நகைப்போடு
நாயின் மண்டையோட்டை
அறையில் வைத்துவிட்டுப் போய்விட்டார்
அதை சாம்பல் கிண்ணமாக்கியபின் சொல்கிறேன்
வாழ்வு நாயின் மண்டையோடாக இருக்கிறது
நிரப்புவதுதான்
வேட்கையாயிருக்கிறது.
-பாலைநிலவன்
No comments:
Post a Comment