Sunday, 30 April 2017

சிவதினகரன் பதிவு

வாசித்ததில் நேசித்தது
நூல் - 4

கவிதை நூல் என்றாலே பின்னங்கால் பிடரியில் அடிக்கும் படி ஓடுவேன்.

ஓடியவனை நிற்க வைத்து மெதுவாய் வருடிக் கொடுத்தது இந்த புத்தகம். அற்புதமான கவிதைகள்.

தஞ்சாவூர் கோபாலி என்ற பெயரில் கட்டுரையும் எழுதுகிறார். எழுத்துக்கள் அனைத்தும் ஒரு சேர மனிதத்தை நேசிக்கின்றன.

"குழந்தைகள் பலூன் வாங்கவில்லை
பலூன் வாங்குபவர்கள் குழந்தைகள் ஆகின்றனர்" எனும் இவர் தஞ்சை பிரகாஷின் நண்பர்.

இவரின் எல்லா கவிதைக்குள்ளும் நாமிருப்போம். வாங்கி படியுங்கள். திரும்ப திரும்ப படிக்கத்தூண்டும் முத்துக்கவிதைகள்.

தஞ்சாவூர் அனன்யா பதிப்பகம்

No comments:

Post a Comment