💥ஒரு நல்ல எழுத்து என்ன செய்யும்?
எல்லாம் செய்யும்!!
ஏதோ ஒன்றாய் , எங்கெங்கோ படித்த, பார்த்த அத்தனையும் மனசுக்குள் வந்து சுழன்றியடிக்கிறது.
💥தஞ்சை கமருதீனின் இந்தக் கவிதையைப் படிக்கும் போது , *பசி* என்பதில் நிலைத்து நிற்கிறது யோசனை.
ஏனோ, தேவர் மகன் படத்தின் வெள்ளம் வடியும் காட்சி ஞாபகத்திற்கு வருகிறது..
💥 தேவர் மகனில் அணை உடைந்து மக்கள் இறந்த போது பார்வையிட வரும் சிவாஜி கமலிடம் சொல்லுவார்…
"ஒரு புள்ளைய பறிகொடுத்தவ சாப்பிட்டுக்கிட்டு இருக்கா பாரு,
மொதல்ல நாம திடமா இருந்தா தான் நம்மள நம்பி இருக்குறவங்களை காப்பாத்தமுடியும்னு"
💥பசின்னா ஜெயமோகனின் *அறம்* தொகுப்பு தான் தொடர்ச்சியாய் தவிர்க்க முடியாமல் ஞாபகத்திற்கு வருகிறது.
சோற்றுக்கணக்கு கெத்தேல் சாகிப், நூறு நாற்காலி தர்ம பாலன், அப்புறம் வணங்கான்.
வஞ்சனையில்லாமல் மூணு பேரும் கலங்கடிச்சிருக்காங்க.
அதுக்கு அப்புறம் பசி மேல தனி மரியாதை வந்தது என்பது தான் உண்மை.
💥நல்ல எழுத்து என்ன செய்யும்.
உடம்பும் மனசும் களைத்துப் போய் உறக்கத்திற்காய் ஏங்கும் ஒரு நல்ல நள்ளிரவில், அது பற்றி யாதொரு பிரதிக்ஞையும் இன்றி, இது மாதிரி எதையாவது கலவையாய் எழுத வைக்கும்.
💥உலகம் ஒவ்வொருவரிடமும் உறைந்துள்ளது.
💥எப்படி கற்பது என தெரிந்து விட்டால், கதவுக்கான சாவி உங்கள் கையில் கிடைத்து விடும். உங்களை தவிர வேறு யாரும் அந்த சாவியை உங்களுக்கு தர முடியாது. கதவை உங்களுக்காக யாரும் திறந்து விட முடியாது.
-ஜே.கிருஷ்ணமூர்த்தி.
💥ஒருவர் தன் சிந்தனையில் ஒரே மாதிரியாக இருந்தால் , அவருக்கு சிந்திக்கும் ஆற்றல் இல்லை என்று அர்த்தம்.
குறிப்பிட்ட சிந்தனை வட்டத்திற்குள் அவர் சிக்கி கொண்டுள்ளார்.
-ஜே.கிருஷ்ணமூர்த்தி
No comments:
Post a Comment