படி.நிறைய படி.எது வேணா படி.ஆனா படிச்சிண்டே இரு.தன்னாலயே தேவையில்லாத்தெல்லாம் உதிர்ந்து போய் என்ன வேணுமோ அதை மட்டும் படிப்பாய்
-லா.ச.ரா
சமூகம் முட்டாள்களை விரும்புகிறது, முட்டாள்களை எளிதாய் நிர்வகிக்க முடியும். அவர்களுக்கு உத்தரவிடுவதும், அவர்களை கையாள்வதும் அவர்கள் மீது அதிகாரம் செலுத்துவதும் எளிது. முட்டாள்கள் கீழ்படிகிறவர்களாகவே இருக்கிறார்கள்.
கீழ்படிவது குற்றம் என்றால்கூட அவர்களால் கீழ்படியாமல் இருக்க முடியாது. அவர்களை கட்டாயப்படுத்தி எந்திரமாக்கிவிட முடியும்.
சமூகத்துக்கு தேவை எந்திரங்களேயன்றி மனிதர்களல்லர். மனிதனை மேலும் மேலும் முட்டாளாக்கினால் அவன் எந்திரமாகிவிடுவான். பணியாளாக,அதிகாரியாக,நிர்வாகியாக இருப்பான்- ஆனால் அறிவற்றவனாக.
-ஓஷோ
$நனைந்து
நடக்கும்போது
மழையும்
உடன் வருகிறது
-ராஜா சந்திரசேகர்
No comments:
Post a Comment