[17/11, 8:23 p.m.] 💥TNPTF MANI💥: புரிந்து விடு என ஒரு கவிதையை மிரட்ட முடியாது. ஒரு கவிதைக்கு புரியவும் புரியாமலிருக்கவும் முழு உரிமை இருக்கிறது. கிட்டதட்ட அது நம்மை போலத்தான்.
-வே.நி.சூர்யா
[17/11, 8:54 p.m.] SATHIS: தவற விட்ட வாய்ப்பெல்லாம் லைனா மனசுல வந்து போகுற அன்னிக்கு தான் நாம ரொம்பவே மனசொடஞ்சு போயிருப்போம்..
-மிருதுளா
[18/11, 6:13 a.m.] 💥TNPTF MANI💥: முழுபலத்துடன் இருக்கும்போது பலவீனமாக இருப்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்து;
பலவீனமாக இருக்கும்போது முழுபலமும் இருப்பதைப்போல் காண்பி
-படித்தது
[18/11, 8:05 a.m.] SATHIS: என்னுடைய முகத்துடன் நான் வாழ்ந்தால்
நிச்சயம் ஒரு முட்டாளாகத்தான் இருக்க முடியும்
-வாரிஸ் டைரி
[18/11, 8:15 a.m.] SATHIS: எனக்குக் குழந்தைகள் இருக்கிறார்கள்; பராமரிக்க...
துணிகள் இருக்கின்றன; தைக்க...
தரை கிடக்கிறது; துடைக்க...
தோட்டம் அழைக்கிறது; குப்பைகளை அகற்ற...
உடைகள் காத்திருக்கின்றன; இஸ்திரி போட...
என்மேல் மிளிர்வாய் பிரகாச சூரியனே!
என்மேல் விழுவாய் மென்மையின் பனித்துளியே...
என்னை உன் வெண்குளிர் முத்தங்களால் மூடு...
இன்றிரவு மட்டும் என்னை ஓய்வெடுக்க விடு..
- மாயா ஏஞ்சலோ
[18/11, 8:15 a.m.] SATHIS: மரணித்தல் ஒரு கலை. மற்ற அனைத்தையும் போலவே நான் அதை மிகச் சிறப்பாகச் செய்கிறேன்.
– சில்வியா பிளாத்
[18/11, 8:21 a.m.] SATHIS: யதார்த்தங்களை புரிந்து கொள்ள கொஞ்சமேனும் மனிதர்களை படித்திருக்க வேண்டும்🍁
-அகி
[18/11, 8:52 a.m.] +91 83447 34304: பட்டாம்பூச்சிகளுக்கான வாழ்வு எனது
அது கட்டமைந்திருப்பது
பூக்களின் அளவேயான பேருலகில்
-காடன்-
[18/11, 3:33 p.m.] 💥TNPTF MANI💥: யாருமில்லாத பிரதேசத்தில்
என்ன நடந்து கொண்டிருக்கிறது?
எல்லாம்"
-நகுலன்
[18/11, 7:38 p.m.] 💥TNPTF MANI💥: உதட்டில் காயமானால்
ஒரு கவலையுமில்லை
உதவிக்கொண்டேயிருக்கிற
நாவினால்.
-தேவதேவன்
No comments:
Post a Comment