நீயா? நானா?
விஜய் டிவி நீயா நானா நிகழ்ச்சி மக்களிடம் சிறப்பான மதிப்பை பெற்ற நிகழ்ச்சி.அதன் ஒரு சில
அனுபவங்கள்.நமக்கு தெரிந்த நபர் டிவியில் வந்தால் பேசுடா பேசு..செவலை தாண்டுடா தாண்டு னு தண்டோரா போடுவோம்.அங்கு நடப்பது நமக்கு தெரியாது.அதுபற்றி..
ஞாயிற்று கிழமை பகலில் ஒரு ஷோ சூட் செய்தால் இரவு தான் சூட். பெரும்பாலும் நைட் சூட் தான்.
இரவு 8.10க்கு சூட்டிங் ஆரம்பிப்பதற்கு முன் இரு இடத்தில் அட்டென்டன்ஸ் கையெழுத்து போடணும். பஜ்ஜி,லட்டு கொடுத்த பின் உள்ளே அனுப்புறாங்க. பிரசாத் ஸ்டூடியோ உள்ளே டிம் இருட்டா இருந்துச்சு.வெளவால் கூடு கட்டியது போல் மேலே லைட்டுகள்.கருப்பு வண்ணம் ஒளியை ஈர்க்க.
இரு புறம் வருகைப்பதிவேட்டின் படி ஆட்களை அமர வைக்கிறாங்க. அமர்ந்த ஒரு படிவ்த்தில் சில பொறுப்புதுறப்பு மற்றும் சுயவிபரம்,சில விதிமுறை ஆங்கிலத்தில் இருக்கும்.அதுவும் சீட்டிங் எண் படி இருக்கும். முதல் வரிசை 5,இரண்டாம் வரிசை 6, மூன்றாம் வரிசை 6என இருக்கும். ஆரம்பிப்பதற்கு முன் எதிர்தரப்பினரை சிரிக்காமல் பார்க்கச் சொல்லி டேக் எடுக்கின்றனர். நடுவில் ஒரு நபரை நிற்கச்சொல்லி அவரை பார்க்கச் சொல்கின்றனர். பின்பு எதிர்தரப்பினரை பார்க்கச்சொல்லி வடிவேலு ஆடியோ போட்டு சிரிக்க வைப்பதை டேக் எடுக்கின்றனர்.
பின்பு கோபி வந்தவுடன் ஒரு புறம்பார்த்து இயல்பான கேள்வியை அடுக்குகிறார். பதில் வரவழைத்து விட்டு மீண்டும் மறுபுறம் திரும்பி இதே கேள்விகள். பின்பு பொதுக்கேள்விக்கு இருவரையும் மோதவிடுகிறார். மைக் கிடைப்பது தான் பெரும்பாடு. நம் டர்ன் வரும்போது அடுத்த கேள்விக்கு போயிருப்பார்.நாம் முந்தைய கேள்விக்கு சொல்ல கூடாது. இவ்வாறாக இரவு 8 மணிக்கு ஆரம்பித்து நள்ளிரவு 2-50வரை நீளும்.
4கேமரா இருக்கும்.இயக்குநர் அந்தோனி பின்னாலிருந்து கோபி காதிற்கு பின்னால் இருக்கும்மைக் வழியாய் கமென்ட் செய்திட்டே இருக்கார்.தவறான தகவல் சொன்னால் ஸ்பாட்டிலியே இருவரும் டிஸ்கஸ் செய்கிறார்கள்.
செலிபிரிட்டி இருந்தால் அவர்களுக்கே அதிக முன்னுரிமை. எல்லாரும் பேசும் வாய்ப்பு குறைவு.எமோசனலா பேசினால் கொஞ்சம் வாய்ப்பு கொடுப்பாங்க. இரவு 2-50க்குவெளிய வந்தால் இட்லி, கம்பு தோசை,ஊத்தப்பம் இருக்கும்.அவ்வளவுதாங்க நீயா நானா
6மணி நேரம் புட்டேஜை முக்கால் மணி நேரம் ஒளிபரப்புறாங்க.டிவிக்கு வெளியே வேடிக்கை பார்த்தது மாதிரிதான் டிவிக்கு உள்ளிருந்து வேடிக்கை பார்க்கலாம். திறமை இருக்கா இல்லையாங்கிற மேட்டர் இல்ல. மைக் கிடச்சுதா இல்லையா என்பதே மேட்டர்
இன்னொரு முறை நீயாநானா பார்க்கும்போது பேசாதவர்களை பாவப்பட்ட பலி ஆடுகளாய் பார்ப்போமாக
No comments:
Post a Comment