எனக்குச் சொற்களை மிகவும் பிடிக்கும். அறியப்படாத ஏதோவொரு உலகிலிருந்து அவை தோன்றுகின்றன. வெள்ளி மீன்களைப் போல் துள்ளிக் கொண்டிருக்கக் கூடியதும், கூழாங்கற்களைப் போல வடிவேறியதுமான சொற்களைத் தேடி ஓடுகிறேன். ஒரு பழத்தைப் போல அவற்றைத் துடைத்துத் தோல் உரித்துக் கடித்துத் தின்பேன். கடினமான சொற்களை உருக்கிக் குடிப்பேன். பேராசையுடன் சொற்களைப் பிடித்து என் கவிதையில் சேகரித்து வைப்பேன். பிரபஞ்சம் அணுக்களால் அல்ல, சொற்களால்தான் உருவாக்கப்பட்டிருக்கின்றது.
- பாப்லோ நெரூடா
‘
சலனமில்லாத ஒரு கற்சிலையைப் போல படுத்திருக்கிறேன். என்னைச் சுற்றிலும் வார்த்தைகள் பூச்சிகளைப் போல பறந்து கொண்டிருக்கின்றன.
- வேஜீனியா வுல்ப்
‘
உலகிலேயே நான் மிகவும் பயப்படுவது வெற்றுக் காகிதத்தைக் (Plain Paper) கண்டுதான். அதில் என்ன எழுதப்படப் போகிறது என்று எந்த எழுத்தாளருக்கும் தெரியாது. சண்டைக் காளையைப் போலவே எழுத்தும் எந்தப் பக்கம் திரும்பப் போகிறது என்று எவராலுமே சொல்லிவிட முடியாது.
- எர்னெஸ்ட் ஹெமிங்வே
No comments:
Post a Comment