[26/12/2017, 7:38 p.m.] 💥TNPTF MANI💥: உன் நிறம் என்னைக் கவர்ந்தபின்தான்
உன் முகத்தைக்
கவனிக்கத் தொடங்கினேன்
-சுந்தரராமசாமி
[26/12/2017, 7:39 p.m.] 💥TNPTF MANI💥: அந்த விடுபட்ட உணர்விலிருந்துதான்,
இந்தச் செருப்பைப் போல்
எத்தனை பேர் தேய்கிறார்களோ
இந்தக் கைக்குட்டையைப் போல்
எத்தனைப்பேர் பிழிந்தெடுக்கப்படுகிறார்களோ
இந்தச் சட்டையைப் போல்
எத்தனை பேர் கசங்குகிறார்களோ
அவர்கள் சார்பில் உங்களுக்கு நன்றி
இத்துடனாவது விட்டதற்கு..
-ஆத்மாநாம்
[26/12/2017, 7:41 p.m.] 💥TNPTF MANI💥: தொலைபேசியில் துண்டிக்கும் கடைசி சொல்லில் அமைந்துவிடுகிறது
பேசுபவர் மீதான விருப்பும்,வெறுப்பும்"!
[26/12/2017, 9:57 p.m.] VIJAI TNPTF: இடுக்கில் பிள்ளையை இடுக்கிக்கொண்டே
மீன் மார்க்கெட்டில்
புஷ்பலீலா கேட்கிறாள்
கல்யாணம் செய்து கொள்ளும்
உத்தேசமே இல்லாயா என்று.
தாடி எல்லாம் பெரிதாக இருக்கிறதாம்.
என்ன விஷயம் என்று சிரிக்கிறாள்.
மீன் வாங்க வந்தால்
மீன் வாங்கிவிட்டுப் போனால் என்ன
எதற்கு இப்படி உயிரை வாங்குகிறாள்
இந்த பஷ்ப லீலா?
_கல்யாண்ஜி
[26/12/2017, 10:00 p.m.] VIJAI TNPTF: ஆற்றில் குளிப்பவர் எல்லோர்க்கும்
பிடித்திருக்கிறது
அசைந்து மிதந்துவரும் பூவை.
அது தங்களுக்கு என்று நினைத்து நீந்துகிறார்கள்
அதன் திசையில்
பூவோ நகர்கிறது
நீச்சல் தெரியாது
ஆறு பார்த்து அமர்ந்திருக்கும்
சிறு பெண் நோக்கி.
_கல்யாண்ஜி.
[26/12/2017, 10:03 p.m.] 💥TNPTF MANI💥: இந்த உலகில் மிகவும் கனமான பொருள் எதுவென்று கேட்டால் புரிந்துகொள்ளப்படாத மவுனம் என்பேன்
-எஸ்.ரா
[26/12/2017, 10:17 p.m.] VIJAI TNPTF: இப்போது தான்
அழகாய் தெரிகிறது
குப்பை தொட்டியில்
என் கவிதைகள்..
நீ கிழித்து போட்ட பின்...
_புதன்.
[26/12/2017, 10:41 p.m.] 💥TNPTF MANI💥: கடவுளின் நாக்கு !
தி இந்து வில் செவ்வாய்தோறும் வெளியாகும் கடவுளின் நாக்கு தொடர் முடிந்தது என நினைக்கும் போது வருத்தமளிக்கிறது.செவ்வாய் வந்தாலே எஸ்.ரா வின் கட்டுரை இடம்பெறும் இடது பக்கத்தை தேடி படித்த 77 வாரங்களும் காலைப் பொழுதை பயனுள்ளதாக்கிய நாட்கள். சிந்தனை தட்டிவிடும் வரிகள்.
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு நாட்டின் நாட்டுப்புற கதைகளை பயன்படுத்தி நம்மையும் அக்கதைகளை தேடிப் பிடித்து
படிக்கச் செய்வார்.
"முல்லா,தண்ணீர் சுமந்து வரும் நண்பனிடம் ஜாக்கிரதை என்பார்.அவன் 'தான் உடைக்கவில்லையே என்பார். உடைந்த பிறகு கண்டித்து என்ன பிரயோசனம் என்று சொல்லி
"கவனத்தில் நிறுத்த வேண்டிய விஷயத்தை நூறுமுறை சொல்வதில் தப்பில்லை" என முடிப்பார்.இதுதான் எஸ்.ரா வின் டச்.
இதேபோல்
*அன்பு தான் வீட்டை தாங்கும் சுவர் எனும் கதை
*சர்க்கரை தேடி வரும் எறும்பு கதை
*கொசு மாப்பிள்ளை தேடிய கதை
*மழை கடவுள் உக்கோ கதை
"இரக்கமற்ற மனிதர்கள் மரங்கொத்தி போல் இப்படித்தான் ஆவார்கள் எனும் அற மனப்பான்மையுடன் கூடிய கதை"
இது போன்ற பல கேள்விப்படாத கதைகள் இத்தொகுப்பில் வந்தது..
ஒரு சாதாரண வாழ்க்கை நிகழ்விலிருந்து துவங்கும். ஒரு புள்ளியாக கட்டுரை துவங்கி, எழுத்தாளரின் அனுபவத்தை சிறிது சேர்த்து,அதற்கு இணையான பொருத்தமான நாட்டுப்புற கதையை கூறி முடிவில் தீர்வாக சொல்லும் கருத்து
நெஞ்சில் ஆனி அடித்தது போல் பதியும்.அந்த நடையைத் தான் எஸ்.ரா அவர்கள் இக்கட்டுரை தொகுப்பு முழுவதும் கட்டமைத்துள்ளார்.
இத்தொடர் நிறைவடைந்தது வருத்தத்தை தந்தாலும்,எஸ்.ரா வின் வரிகளே பொருத்தமாய் இருக்கும் என எண்ணுகிறேன்..
"ஒரு பூனை ஒரு நூல்கண்டை உருட்டிச்செல்லும்.பூனை பின்னாலே விரட்டிப்போகும்.முடிவில் நூல் முடிந்து விடும்.பூனை திகைத்து நிற்கும்.அந்தத் திகைப்பு அற்புதமானது.அந்த வெறுமையை புரிந்து கொள்ள முடியாத பூனைதான் வாசகனின் மனது.
புத்தகம் வெறும் சொல் அல்ல முடிவற்ற பயணம்.நம் விருப்பமும் தேடுதலும் மிக முக்கியம்.எனவே இதே ஆர்வத்தோடும் சுவாரஸ்யத்தோடும் எஸ்.ரா வின் அடுத்த படைப்பை எதிர்நோக்குவோம்.
தோழமையுடன்..
மணிகண்டபிரபு
திருப்பூர்
[27/12/2017, 7:37 a.m.] 💥TNPTF MANI💥: @Kalasal
மீளவே முடியாது என்று நினைத்திருந்த பிரச்சனைகள் எல்லாம் இப்போது சிறு புன்னகையாய் மட்டுதே நினைவில் இருக்கிறது, காலத்தின் வலிமை அபாரமானது...
[27/12/2017, 7:41 a.m.] 💥TNPTF MANI💥: மௌனம் கொண்டு ஓடி வந்தேன்
வார்த்தை வரம் கேட்டாய்...
-அறிவுமதி
[27/12/2017, 11:19 a.m.] 💥TNPTF MANI💥: Best quote
A good leader takes a little more than his share of the blame, a little less than his share of the credit.
Arnold H. Glasgow
No comments:
Post a Comment