[29/12/2017, 6:32 a.m.] 💥TNPTF MANI💥: சைக்கிள் கமலம்
“அப்பா மாதிரி ஒருத்தன் உதவினான்.
மைதானத்தில் சுற்றிச் சுற்றி
எங்கள் ஊர்க் கமலம் சைக்கிள் பழகினாள்.
தம்பியைக் கொண்டு போய்ப்
பள்ளியில் சேர்ப்பாள்.
திரும்பும் பொழுது கடைக்குப் போவாள்.
கடுகுக்காக ஒரு தரம்.
மிளகுக்காக மறு தரம்.
கூடுதல் விலைக்குச் சண்டை பிடிக்க
மீண்டும் ஒரு தரம் காற்றாய்ப் பறப்பாள்.
வழியில் மாடுகள் எதிர்ப்பட்டாலும்,
வழியில் குழந்தைகள் எதிர்ப்பட்டாலும்
இறங்கிக் கொள்வாள் உடனடியாக.
குழந்தையும் மாடும் எதிர்ப்படா வழிகள்
எனக்குத் தெரிந்து ஊரிலே இல்லை.
எங்கள் ஊர்க் கமலம் சைக்கிள் விடுகிறாள்.
என்மேல் ஒருமுறை விட்டாள்.
மற்றப் படிக்குத் தெருவில் விட்டாள்...”
- ஞானக்கூத்தன்.
[29/12/2017, 6:32 a.m.] 💥TNPTF MANI💥: விளிம்பு காக்கும் தண்ணீர்
“கொட்டிவிட்ட தண்ணீர்
தரையில் ஓடியது. ஓடி
சற்று தூரத்தில் நின்றுவிட்டது
வழி தெரியாதது போல.
தொங்கும் மின்விசிறியின் காற்று
தண்ணீரை அசைக்கிறது
மேலே தொடர்ந்து செல்ல
தண்ணீருக்கு விருப்பமில்லை
அங்கேயே நிற்கிறது தண்ணீர்.
காற்றினால் கலையும்
தன் விளிம்புகளை
இறுகப் பிடித்துக்கொண்டு
அங்கேயே நிற்கிறது தண்ணீர்.”
- ஞானக்கூத்தன்.
[29/12/2017, 6:52 a.m.] 💥TNPTF MANI💥: இந்த வாரம் எப்பிடி போச்சினு யோசித்தால் வீக் என்ட்
இந்த வருஷம் எப்படி போச்சினு யோசித்தால் இயர் என்ட்
[29/12/2017, 8:52 a.m.] 💥TNPTF MANI💥: “எடை போட்டு
விற்கப்படுகிற
சந்தையில்
தனிப்பூவின் அழகு
செல்லுபடியாவதில்லை..!”
-யுகபாரதி.
[29/12/2017, 12:42 p.m.] 💥TNPTF MANI💥: என் முறை வருமென்று...
“அப்பா சொன்னாரென...
பள்ளிக்குச் சென்றேன்,
தலை சீவினேன்,
சில நண்பர்களைத் தவிர்த்தேன்,
சட்டை போட்டுக்கொண்டேன்,
பல் துலக்கினேன், வழிபட்டேன்,
கல்யாணம் கட்டிக்கொண்டேன்.
காத்திருக்கிறேன்...
என் முறை வருமென்று..!”
- கனிமொழி.
[29/12/2017, 2:57 p.m.] 💥TNPTF MANI💥: RT"@HAJAMYDEENNKS:
அநியாயங்களும்,அக்கிரமங்களும் தட்டி கேட்கப்படுகின்றன.. கீபோர்டுகளில்...!"
[29/12/2017, 3:00 p.m.] 💥TNPTF MANI💥: தமிழை சிம் மொழி ஆக்கியது ஆண்ட்ராய்டு போன்கள்"
-கவிதா
[29/12/2017, 5:52 p.m.] 💥TNPTF MANI💥: ஆசிரியர் அளிப்பது அவர் கடந்துவந்த பாதையை மட்டுமே! மாணவன் கற்றுக்கொள்வது தான் செல்லவேண்டிய பாதையைத்தான்!! #வெண்முரசு
[29/12/2017, 7:44 p.m.] 💥TNPTF MANI💥: மழை விட்டவுடன் வரும் வெயில் போல வெப்பமில்லா ஒரு வெளிச்சம்
-ஜெயமோகன்
[29/12/2017, 8:07 p.m.] 💥TNPTF MANI💥: உன்னைப்
பற்றிக்கொள்ளவே
முடியாதென
புரிந்த நாளில்தான்
எனக்குத் தெரிந்தது
இவ்வளவு நாளும்
உன்னை
எவ்வளவு
பற்றிக்கொண்டிருந்தேன்
என்பது
#மனுஷ்
[29/12/2017, 8:08 p.m.] 💥TNPTF MANI💥: எப்படி யோசித்தாலும்
ஒரு வேலை நாளில்
நான் இறப்பது
நல்லதல்ல என்றே
தோன்றுகிறது
#மனுஷ்யபுத்திரன்
[29/12/2017, 9:08 p.m.] 💥TNPTF MANI💥: பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்திருக்கும்
பிச்சைக்காரர் எதிர்பார்ப்பது
பேருந்தை அல்ல,
பேருந்திற்கு காத்திருப்பவர்களை
-மணி
[30/12/2017, 7:17 a.m.] 💥TNPTF MANI💥: நிவாரணமில்லாத வயிற்றுவலி எப்போதும்
கால்குடைச்சல் என்றாலும்
மரியாதைக்குப் பயந்து
மாமியாளுக்கு எழுந்து நிற்க வேண்டும்
-சுகந்தி
[30/12/2017, 7:26 a.m.] 💥TNPTF MANI💥: மனைவி ஊருக்கு போயிட்டா
கை ஒடிஞ்ச மாதிரி இருக்கும்
ஆனால் ஆயிரம் இறக்கை முளைத்தது போல் தோன்றும்
-p
[30/12/2017, 7:37 a.m.] 💥TNPTF MANI💥: காலைப் பனி தூங்கச் சொல்கிறது,
காலையில் பணி தூங்க விடாமல் செய்கிறது
[30/12/2017, 7:57 a.m.] 💥TNPTF MANI💥: *பலிக்கவா போகிறது என்பதுபோல் சில சாபங்கள்.
*மரியாதை நிமித்தமாகவே சில மௌனங்கள்..
*மூக்கில் பஞ்சை அடைத்து விட்டீர்கள் உடல் அருகே
புகையும் ஊதுபத்திகள்
எவர் நன்மைக்கோ
*என்றாவது உன்னால் தேடப்படுவேன் என்பதால் தொலைதலும் கவன ஈர்ப்புதான்.
*எத்தனை நற்குணங்கள் கொண்டிருந்தாலும் சிறு தவறுதான் நம் அடையாளமாகிவிடுகிறது.
#படித்ததில் பிடித்தது
[30/12/2017, 8:30 a.m.] 💥TNPTF MANI💥: இந்தியாவுக்கு நேரக்கூடிய மிகப்பெரிய அபாயம் கம்யூனிஸ்ட்டுகளால் அல்ல.
"வலதுசாரி இந்து மதவாதத்தால்"!
-நேரு
[30/12/2017, 9:25 a.m.] 💥TNPTF MANI💥: யாராவது எனக்கிருப்பார்கள் என்றும்,யாருக்காகவோ நான் இருக்கிறேன் என்றும் நம்பி, எல்லோர்க்கும் அன்புடனே எழுதிக் கொண்டிருக்கவே நான் தொடர்ந்து முயன்று கொண்டிருக்கிறேன்
-வண்ணதாசன்
[30/12/2017, 11:06 a.m.] 💥TNPTF MANI💥: ''இயற்கை ஒருபோதும் தவறு செய்வதில்லை. உடல் ஒருபோதும் தன் கடமையை நிறுத்துவதில்லை."
#நம்மாழ்வார்
[30/12/2017, 12:20 p.m.] 💥TNPTF MANI💥: இந்த புறக்கணிப்பு உனக்கானதல்ல. கோவம் யார்மீதோ நீ வெறும் தற்செயலே.
-படித்தது
[30/12/2017, 12:21 p.m.] 💥TNPTF MANI💥: நமக்கு கிடைப்பதல்ல
நாம் தேர்ந்தெடுப்பதே
நம் துன்பத்துக்கு காரணம்
[30/12/2017, 2:39 p.m.] 💥TNPTF MANI💥: நாணயமாய் இருக்கிறேன்..
பத்து ரூபாய் காசைப் போல
பார்க்கிறார்கள்!!
-வெண்பா
[30/12/2017, 5:53 p.m.] 💥TNPTF MANI💥: ஒரு அன்பையோ, காதலையோ நிராகரிப்பதை போல் அத்தனை எளிதாய் இல்லை ஒரு நினைவை நிராகரிப்பது...
@kalasal
[30/12/2017, 8:26 p.m.] 💥TNPTF MANI💥: 2017 ல் வாசித்த புத்தகங்கள்
-மணி
*அ.முத்துலிங்கம் சிறுகதை தொகுப்பு
*காகங்கள்-சுந்தரராமசாமி (மறுவாசிப்பு)
*பின் தொடரும் நிழலின் குரல்-ஜெயமோகன்
*விஷ்ணுபுரம்-ஜெமோ
*மானாவாரிப்பூ-மேலாண்மை பொன்னுசாமி
*ஒரு சிறு இசை-வண்ணதாசன்
*கொற்றவை-ஜெயமோகன்
*சிந்தனை ஆயிரம்-2 ஜெயகாந்தன்
*ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்- ஜெயகாந்தன்(மறுவாசிப்பு)
*கழனியூரன்-கரிசல் காட்டு கதைகள்
*ஆத்மாநாமின் படைப்புகள்
*தெற்கிலிருந்து ஒரு சூரியன்
*இந்தியாவும் உலகமும்-பி.ஏ கிருஷ்ணன்
*360*,&சாத்தானை முத்தமிடும் கடவுள்- ஜி.கார்ல் மார்க்ஸ்
*புதுமைப்பித்தனும் கயிற்றரவும்
*விசும்பின் துளி-நாடன்
*கி.ரா கதைகள்&கட்டுரைகள்
*சுந்தரராமசாமி ஒரு கதைக்காரர்
*உலக நாடோடி கதைகள்-எஸ்.ஏ பெருமாள்
*வீடில்லா புத்தகங்கள்-எஸ்.ரா
*அப்துல் ரகுமான் கவிதை தொகுப்பு
*ததும்பி வழியும் மெளனம்
*இந்த விநாடி
*மலர்வனம்-ரூமி
*எது கல்வி-இரா.எட்வின்
*காற்றின் பாடல்-கலாப்ரியா
*மார்க்சியம் பெரியாரியம்-ஞானி
(வாசிப்பில்)
##குறிப்பு:
இவரை எல்லாம் வீட்ல ஒன்னும் சொல்ல மாட்டாங்க போல,இவருக்கெல்லாம் நேரம் கிடைக்குது நமக்கு அப்படியா என்று மட்டும் நினைச்சிடாதீங்க. பல இடையூறு மற்றும் பணிகளுக்கு இடையில்தான் வாசிப்பே. என்னையும்
சகித்துக்கொண்டு, வாசிப்பை ஊக்குவிக்கும் மனைவிக்கு நன்றி.
இன்னும் படிக்காத புத்தகங்களை படிக்க வேண்டும் என்பதே 2018ன் குறிக்கோள்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment