I💥: உப்பிட்டவனை உள்ளளவும் நினையென்கிறாய்
தெரியவில்லை நினைக்க
உப்புள்ள வரையா
உயிருள்ள வரையா
-யுகபாரதி
தமிழ் எழுத்தாளன்
பல சமயங்களில் நான் உள்வாங்கியவற்றைச் சுமக்கும் பலமற்றவனாய் இருப்பதை உணர்ந்திருக்கிறேன்.
- ச.பாலமுருகன்
‘
இவனும் கவிதையில் புலம்புவதாக எல்லோரும் சொல்கிறார்கள். புலம்புகிறாற் போலத்தான் இருக்கிறதோ இருப்பு?
- விக்ரமாதித்யன்
‘
கற்றறிவதனால் அறியத் தெரியும் வேதனையை ஒருவகையில் பேருவகை என்றுதான் சொல்லவேண்டும். இதனைப் போலி சுயஅடக்கத்தால் உணர முடியாது. அறியாமையைப் பற்றிய சுயபோதம்தான் தேவை.
- சுந்தர ராமசாமி
‘
ஒன்றுக்கொன்று மாறுபட்ட ஒழுக்கங்களை ஒழுக்கக்கேடு என்று புரிந்துகொள்வது ஒருவகை தீயொழுக்கம்.
- ஜெயகாந்தன்
‘
மனிதனுக்கு லாகிரிப் பொருட்கள் தேவையாகத்தான் இருக்கின்றன. குடும்பம், சம்பள உயர்வு, அதிகாரம், சமூக அந்தஸ்து... இவைகள் எல்லாமே போதைப் பொருட்களாக உருவெடுக்கின்றன.
- நகுலன்
‘
மனித மனத்தின் விசித்திரம் பற்றி யார் என்ன சொன்னாலும் அது சரியா இருக்கறது இல்ல.
- சா.கந்தசாமி (‘எட்டாவது கடல்’ நாவலில்)
‘
எல்லாம் முக்கியமானவைதாம்; ஆனால் ஒன்றும் அவ்வளவு முக்கியமானதும் அல்ல.
- க.நா.சு.
No comments:
Post a Comment