கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை.
இந்தக் குறளில் “ஒருவர்க்கு” என்பதுதானே சரி ?
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” குறளில் “உயிர்க்கும்” என்றுதானே உள்ளது...
உயிற்கும் என்று இல்லையே... அது போல கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவர்க்கு என்றல்லவா இருந்திருக்க வேண்டும் ?
**
ஒருவன்+கு = ஒருவற்கு என்றே புணரும்.
ஒருவனுக்கு என்று புணர்த்துவது தவறு. நாம் தவறாகவே எழுதிக்கொண்டுள்ளோம்.
மகன்+கு = மகற்கு என்று புணர்வதும் இவ்வாறுதான்.
அவன்+கு = அவற்கு என்று ஆகும்.
மகனுக்கு, அவனுக்கு என்று எழுதிக்கொண்டுள்ளோம்.
ஒருவர்+கு = ஒருவருக்கு என்று எழுதுவதும் பிழை. ஒருவர்க்கு என்றே புணர்த்தி எழுத வேண்டும். அதனால்தான் உயிர்+கு = உயிர்க்கு என்று புணர்ந்தது. இன்றைய வழக்கில் ‘உயிருக்கு’ என்று எழுதுகிறோம்.
நல்ல தமிழில் எழுதுவதாக நாம் நம்பிக்கொண்டுள்ள பலவிடங்களில் இவ்வாறு பிழைகள் செய்கிறோம்.
-மகுடேசுவரன்
No comments:
Post a Comment