பண்டிதன் எழுதுவ துதமிழ் இல்லை.அ
பண்டிதன் கணக்குப்படி;அ
பண்டிதன் எழுதுவ துதமிழ் இல்லை;இ
பண்டிதன் கணக்குப்படி. ஆ
க மொத்தம்
தமிழர் நமக்குத் தெரியவில்லை
தமிழ் எ ழு த.
-சி.மணி
#நீ கவிதை எழுதுவதும்
அவன் மலம் எடுப்பதும்
மதிப்பீட்டில் வேறானாலும்
வகையில் ஒன்றுதான்
ஒரு கோணத்தில் பார்த்தால்
அவனது
உனதைவிடச் சிறந்தது.
மேலும்
அலைவுகளை விட்டுச் செல்வதைவிட
சுவடற்று மறைவது மேல்.
-சி.மணி
# எத்தனையோ மாற்றங்கள்
குறிதவறிய ஏமாற்றங்கள்
மனம்புழுங்க பலவுண்டு
குதிரை வரைய குதிரையே
வராது; கழுதையும் வரலாம்.
இரண்டும் கலக்கலாம்.
எலிக்குப் பொறிவைத்தால்
விரலும் விழுவதுண்டு.
நீர்தேடி அலையும்போது
இளநீரும் கிடைக்கும்.
-சி.மணி
#தலையைச் சொரி
நாக்கைக் கடி!
பல்லை இளி!
முதுகை வளை
காலைச் சேர்!
என்ன இது?
வயிற்றைக் கேள்
சொல்லுமது.!
-ஷண்முக சுப்பையா.
#உனக்கு
நீ
இருப்பதால்
நான்
உண்டு;
எனக்கு நீ இல்லையென்றால்
நான் இல்லை.
-நகுலன்
#ஒருவன் இதயத்தைத் துன்புறுத்தும் செய்தியை நீ அறிந்திருந்தால் மௌனமாக இரு.
மற்றவர்கள் அந்த செய்தியைத் தெரிவிக்கட்டும்.!
வசந்தத்தின் செய்தியை குயில் தெரிவிக்கட்டும்.
மற்றதை ஆந்தையிடம் விட்டுவிடு.!
-ஷாஅதி
No comments:
Post a Comment