ஞாபகத்தின் முடிவற்ற வெளியில்
ஒளிர்ந்திருக்கும் ஒற்றைச் சொல்லை
கண்டுப்பிடிக்க இயலாமல்
களைத்துத் திரும்பியது மனப்பறவை
-பாவண்ணன்
#ஒரு வளர்ப்பு நாயை மெல்ல மெல்ல பழக்குவது போல,
தண்ணீரை காசு கொடுத்து வாங்குவதற்கு நம்மை பழக்கப்படுத்திவிட்டனர்
-பாரதி தம்பி
# நினைவுக்கு வரும் அவமானம்
அதன் பின்னால் நடந்த அத்தனை அவமானங்களையும் நினைவுக்கு கொண்டு வரும்
-மணி
#எனக்கு யார்மீதும் புகார் கிடையாது, என்ன...ஒரு சௌகர்யமான வாழ்வு கிடைத்திருந்தால், இரண்டு வேளை உணவை எனக்கு இந்த சமூகம் உத்தரவாதமாக அளித்திருந்தால் என்னால் இன்னும் நல்ல படைப்புகளை, கதைகளை எழுதியிருக்க முடியும். அந்த வருத்தம் எனக்கு உண்டு ஆனாலும் பரவாயில்லை புதுமைப்பித்தனை விட , பாரதியை விட நான் நன்றாக இருக்கிறேன்.
பிரபஞ்சன்.
No comments:
Post a Comment