கற்றதும் பெற்றதும்-22
*மணி
பெரும்பான்மையினர் பின்பற்றுகின்றனர்,இருப்பவர் பலரும் ஏற்றுக் கொண்டனர் என்பதால் எதையும் நீ நம்பிவிடாதே
-பாரதிதாசன்
#பாரதிதாசன் உவமைகள்
"தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்- இன்பத் தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்".
20 ஆம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற கவிஞர்களில் பாரதிதாசன் ஒருவர். தமிழர் இன உணர்ச்சி, மான உணர்ச்சி, சிந்தனை திறன் பெற்றவர்களாக மாறி புதிய சமுதாயம் படைக்க தன் வரிகளை பயன்படுத்திய ஒப்பற்ற கவி.
# அறிவு பெற்றோர் உள்ளொளி பெற்றோர் அறிவினை ஆதவனுக்கும், அறிவின்மை இரவிற்கும் ஈடு செல்வர். அதனை வேராக கையாண்டு ஒரு கவி.
" கேள்வியால் அகலும் மடமை போல் நள்ளிரவு மெதுவாய் நடந்து கொண்டிருந்தது"
# நரிக்கண்ணன் பூதம் என்று இல்லாத கதை ஒன்று காட்டி மக்களை அச்சுறுத்தி எண்ணுகிறான் ஒருவன். பூதம் கண்ட மக்கள் அஞ்சுகிறார்கள், இங்குமங்கும் ஓடி, மரத்தின் மீதும், பரண் மீதும், கிணற்றினுள்ளும் மறைகிறார்கள். அவர்களின் அச்ச உணர்வை பார்த்து
"அஞ்சி அஞ்சி சாவாரடி கிளியே, அவர்
அஞ்சாத பொருள் இல்லை அவனியிலே"
# சீதையின் மெல்லிய கால்களை உவமித்த கம்பனின் பார்வையிலிருந்து விலகி, பாரதிதாசன் கண்களுக்கு பெண்ணின் கால்கள் தென்படும் தோற்றம் வேறு. மிக மென்மையான சிவந்த நாவினை உடையது நாயே. அதன் நா மகளிரின் மெல்லடிக்கு இணை என எண்ணத் தோன்றுகிறது அதன் பயன்
"நாயின் நாக்கு போன்ற சிவந்த மெலடி"
என்ற அழகிய எளிய உவமை
#காதலியர் கடைக்கண் காட்டிவிட்டால் மாமலையும் ஓர் கடுகாம் என்றார் கவிஞர். அந்தக் காதலின் ஆற்றல் பற்றி கூறும் கவிஞர், காதற் கிழத்திக்கு பணியொன்று சொல்லிடின், அப்பணி செய்யும் விரைவு, விட்டெறியும் கல் மேல் செல்லும் போது எந்த அளவில் விரைவில் செல்லுமோ அதுபோன்று விரைந்து செயல்படும் ஆற்றல் உள்ளது.
இதனை,
"கிட்டறிய காதற் கிழத்தி இடும்வேலை
விட்டெறிந்த கல்லைப்போல் மேலேறிப் பாயாதோ"
#இரவு
இருளைப் பற்றிக் கூறும் போது ஒரு குடம் அதனுள்ளே நீல வண்ணம் நிறைய கரைக்கப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளது. குடத்தின் உட்புறம் ஒளி குறைந்து மங்கித் தெரிவது இயல்பு. ஆனால் அதனுடன் மேலும் நீல வண்ணம் கரைத்த நீர் சேர்த்திடின் அதனுள் ஒளி போமோ? இருண்டு கருமையாய் தெரியும். அதனை
" நீலம் கரைத்த நிறைகுடத்தின் உட்புறம் போல் ஞாலம் கறுப்பாக்கும் நள்ளிருள்"
# "குதிகாலும் மேற்செல்லும் அடுத்தபடி கீழேதான்
வந்து சேரும்
அது இயற்கை! மலைக்காதீர்! அறிவு நாள் இது
கொடுமை அழிந்தே தீரும்"
மேற்சென்ற குதிகால் மீண்டும் கீழேதான் வந்து சேரும். வராமல் மேலே இருந்து விட இயலாது. அதனால் காலம் நிலைத்தது என்று எண்ணாதீர்! கொடுமை அழிந்துவிடும் என்று சமுதாயத்தில் கொடுமைக்கு வித்திடுபவரை கண்டனம் செய்து எச்சரிக்கிறார்.
#மேலும் சில உவமைகள்
* நாமிருவர் பூப்போல் மனம்போல் இருள் மற்றும் இன்பநிலா போல்
*குளிர்போல் ஒருமித்தல் வேண்டும்
*படைநடத்தக்
கழறுமொழி ஒவ்வொன்றும்
அதிர்வேட் டேயாம்!
*"காரிருள் அகத்தில் நல்ல
கதிரொளி நீயே..இந்தப்
பாரிடைத் துயில்வோர்
கண்ணில் பாய்ந்திடும்
எழுச்சி நீதான்."
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment