[02/06, 7:04 pm] TNPTF MANI: பஸ்ஸில் போனபோது
சாலையோரம் இரண்டு செம்பாறைகள்
ஒன்றையொன்று கேலிசெய்து கொண்டன
ஒன்று உறுதியளித்தது
இயேசு சீக்கிரம் வருகிறார்
இன்னொன்று சொன்னது
HMT வாட்ச்சுகள்
உங்கள் நேரத்தைக்
சரியாக காட்டும்
-நாகூர் ரூமி
[02/06, 7:23 pm] TNPTF MANI: வாங்கியவுடன்
கால் முளைத்துவிடுகிறது
"செருப்புக்கு"!
[03/06, 6:50 am] TNPTF MANI: மனித இதயம் ஏன் உள்ளே இருக்கிறது?
கலைஞர்:இதயம் இல்லாதவர்களும் இருப்பதாக காட்டிக் கொள்ளத்தான்.!
-கலைஞர்
[03/06, 7:39 am] TNPTF MANI: முன்முடிவு
முழம்போட்ட மல்லிகையை
நீளம் விட்டு நறுக்கும் பூக்காரி
நல்லவளாகத் தெரிகிறாள்
உணவு மேசையில் கேட்காமல்
உபரியாய் பரிமாறும் சிப்பந்தி
நல்லவனாகத் தெரிகிறான்
எதிர்ப்படுகையில் சிரிக்கிறவர்களுக்கும்
எல்லாவற்றையும் பகிர்ந்து
கொள்கிறவர்களுக்கும்
நல்லவர்களாக தெரிகிறார்கள்
நாமும் இன்னொருவருக்கு
நல்லவராக தெரிய விரும்புகிறோம்
நல்லது என்பது தெரிவதில் இல்லை
தெரியாததிலும் உண்டு என்பது நமக்குத் தெரியாது
- யுகபாரதி
[03/06, 12:27 pm] TNPTF MANI: ஓடி வருகின்றன மீன்கள்
நேற்று பொரி போட்ட கையில்
இன்று தூண்டில்
-ராஜா சந்திரசேகர்
[04/06, 7:16 am] TNPTF MANI: இருவிரல் குவித்துப்
பிடிக்கப்போகும் கணம்
அடுத்தடுத்த பூவுக்குப்
பறந்தமரும்
பட்டாம்பூச்சியைப் போல்
போக்குக் காட்டுகிறது
குழந்தை
வீட்டுக்கு வரும்
அறிமுகமில்லாதவர்
அழைக்கையில்..!”
-எழிலரசு.
[04/06, 7:26 am] TNPTF MANI: திங்கட்கிழமை மீது எனக்கு ஒரு கோபமும் இல்லை! அது வரும்போதே நான்கு வேலைநாட்களையும் உடன் அழைத்து வருகிறதே.. அதுதான் பிரச்சனை
-அ.முத்துலிங்கம்
[04/06, 7:15 pm] TNPTF MANI: இச் சாக்கடை நீரில்
உறுமீன் ஏது
கிடைக்கிற குஞ்சுகளைக்
கொத்தித் தின்
என் கொக்கே
-இசை
[04/06, 7:17 pm] TNPTF MANI: ஒருநாள் விடுப்பெடுத்த சிறுவனைப் போல
இறந்தவர்கள்
வெளியேறிக் கொண்டு இருக்கிறார்கள்
எப்போதும் இந்த
பாழ் பட்ட மண்ணைவிட்டு
-திவ்யா
[05/06, 6:18 am] TNPTF MANI: அடிக்கடி ஏன் முகம் பார்க்கிறேன் இழந்துவிடுவேன் என்பதாலா?
-சுகுணா திவாகர்
[05/06, 6:49 am] TNPTF MANI: எல்லோரும் அவர்களுக்குள் திருப்தி அடைவார்களானால் அங்கே கதாநாயகர்கள் தேவையில்லை
-மார்க் ட்வைன்
[05/06, 6:51 am] TNPTF MANI: "கட்டுரையின் உயிர்நாடி எடுத்தாளப்படும் பொருளில் இல்லை;எந்தப் பொருளும் ஏற்புடையது தான்.அது ஆளுமை வசீகரத்தில்தான் ஜீவிக்கிறது.கட்டுரையின் அழகு அதனைக் கருவுற்று,பதிவு செய்த உள்ளத்தின் ஆளுமையின் வசீகரத்தில்தான் உறைகிறது.
"கட்டுரையாளன் வாழ்க்கையின் பெரு இலக்குகளையும், அர்த்தங்களையும் பற்றிக் குரல் எழுப்புவதற்கு முன்னுரிமை கொடுக்காமல், வாழ்க்கையின் பவனியிலே திளைக்க வேண்டும்.காட்சிகளாகவும், மாந்தர்களாகவும் வாழ்க்கை பின்னிச் செல்லும் சித்திர விகசிப்புகளில் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும்
-A.C பென்ஸன் கட்டுரை குறித்து
[05/06, 7:08 am] TNPTF MANI: ஒவ்வொரு மனிதனும் தனக்குள் ஒரு உலகத்தை வைத்திருக்கிறான். ஒவ்வொரு பெண்ணும் தனக்குள் ஒரு இருட்டை ஒளித்து வைத்திருக்கிறாள்.
- தஞ்சை ப்ரகாஷ்
[05/06, 12:38 pm] TNPTF MANI: ஒரு அரசியல் தலைவர் பெரிய படத்தின் கீழ் என்ன பெயர் எழுதியிருக்கிறது என்று குனிந்து உற்றுப்பார்த்து படிக்க முயன்று கொண்டிருப்பார்.அருகில் உள்ளவர் "காந்தி சார்" என்பார்
-ஆர்.கே.லக்ஷ்மன் கார்ட்டூன்
[06/06, 6:55 am] TNPTF MANI: ஒரு வேளை உணவை ஒழியென்றால்
ஒழியாய்
இரு வேளைக்கு ஏலென்றால் ஏலாய்..
"உன்னோடு வாழ்தல் அரிது வயிறே"!
[06/06, 7:39 am] TNPTF MANI: கவிதை எனக்கு வராது
அதன் சுருக்கம் நெருக்கம்
சிக்கனம் மெத்தனம் யத்தனம்
எல்லாம் எனக்கு
நடுக்கம்
நான் உரைநடை ஆசாமி
வாக்கியங்கள் நீளலாம்
வேண்டுமிடத்தில் மாளலாம்
நெளிய வேண்டாம்
காதல் போன்ற அபத்தங்களில்
ஒளிய வேண்டாம்
வார்த்தைகளைச் சலிக்க வேண்டாம்
அவை மணியோசை போல
ஒலிக்க வேண்டாம்”
** ** ** ** **
“கவிதை கவிஞர்களுக்கு...
உரைநடை கலகங்களுக்கு..!”
- சுஜாதா.
[07/06, 7:07 am] TNPTF MANI: போய் வருகிறேன்
இப்போதெல்லாம்
போய் வருகிறேன்
என்று யாரும் சொல்லிச் செல்வதில்லை
அப்படியே மறைந்துப் போகிறார்கள்
வழியனுப்பும் வகையில்லாமல்
சேமித்து வைத்திருக்கும் கண்ணீரில்
சில துளிகள்
கவனிக்கப்படாமல் வழிகின்றன
தொடர்பறுந்து போன
உரையாடலின் இறுதி வரி
நம்முடையதாக இருக்கும்போது
விம்மும் மனதை தேற்ற
உரியவரின் பதில் வரியையும்
நாமே எழுதிக்கொள்ள வேண்டியிருக்கிறது
நினைவாக மறுக்கும் நினைவாக
விடாமல் துரத்தும்
அருகாமை சூட்டையும், வாசத்தையும்,
ஈரத்தையும், தீண்டலையும், பார்வையையும்
இல்லை என்று ஒரு இறுதியாகாத சொல்
எதிர்கொள்ள முடியாமல் மாள்கிறது
ஒரேயடியாக யாரும்
போய்விடுவதில்லை தான் என்றாலும்
விடைகொடுத்தல்
இல்லாத பிரிவு
எழுதி முடிக்கப்படாத கவிதையை
ஒரு செத்த எலியாக்கி
காக்கையிடம் கையளிக்கிறது
-லீனா மணிமேகலை
[07/06, 7:16 am] TNPTF MANI: பேருந்துப் பயணம் என்பது ஒரு நாயைப் பழக்குவதைப் போன்றது. அதற்கு தினமும் பேருந்தில் பயணிக்க வேண்டும். ஆனால், தினமும் பேருந்தில் பயணித்தல் என்பது எல்லோருக்கும் கிடைத்துவிடும் பாக்கியம் அல்ல. பேருந்தில் தொடர்ந்து பயணிக்க வேண்டுமென்றால் பேருந்துடன் ஒர் ஒன்றுதல் ஏற்பட வேண்டும். முக்கியமாகப் பொறுமை வேண்டும். பொறுமையில்லாதவர்களுக்கு பேருந்து உகந்ததல்ல.
-படித்தது
[07/06, 7:22 am] TNPTF MANI: “சுதந்திரப்போராட்ட காலத்தில் எங்கு பார்த்தாலும் காந்திகளாகத் தெரிந்தார்கள். சுதந்திரம் கிடைத்த பின்னர் தெரிந்தது, காந்தி மட்டும்தான் காந்தி என்று”
- கிரிராஜ் கிஷோர்
[07/06, 7:25 am] TNPTF MANI: ஆறிவரும் தழும்பின்
நமநமப்பு அழைக்கிறது
அன்பின் வருடலை
மீண்டும் புண்ணாக்குவதற்கோ
அன்பின் மிகுதியை
அது அலாவுகிறது
-தேவதேவன்
[07/06, 12:55 pm] TNPTF MANI: பசி என்பது உண்மையில் ஒரே வித அனுபவம் அல்ல.ருசியான உணவு கிடைக்கும் என்ற உறுதி உள்ள ஒருவனுக்கு பசி என்பது ஒரு இனிய அழைப்பாக இருக்கக்கூடும்.கடுமையாக உழைத்த பிறகு பசி உடலெங்கும் ஊறிப்பரவும் ஓர் இனிய அனுபவம்.
பசித்து வெகுதூரம் நடக்கும்போது பசி தூரத்தை அளக்கும் முழக்கோல்.தனியறையில் பசித்து படுத்திருக்கையில் அது ஒரு ஓயாத சத்தம். காத்திருக்கும் போது நச்சரிப்பு.
ஆனால் பசியின் பயங்கரம் அதற்கான உணவு கிடைக்கும் என்பது எவ்விதத்திலும் நிச்சயமற்ற ஒன்றாக இருக்கும் போதுதான் தெரியவரும்.
அந்தப்பசி அணைக்கப்படாது பெருகி நம் உயிரையே காவு கேட்கும் வாய்ப்பு உள்ளது என்று அறியும்போது ,பசி என்பது பெரும் அச்சம்
-ஜெயமோகன்
(பின் தொடரும் நிழலின் குரல்)
[08/06, 6:54 am] TNPTF MANI: கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூராய்ந்து
கூறுடனே கூராக்கிக் கூறு
-திருவள்ளுவர்
[08/06, 7:13 am] TNPTF MANI: என்றேனும் நிகழும்
நீ திரும்பும் கணமென்னும்
எதிர்பார்ப்பை எப்போதும்
பொய்யாக்கிப் போகும்
உன் முகம் திரும்பா
பிரிதல்கள்..!”
- செல்வராஜ்
[08/06, 7:25 am] TNPTF MANI: நீ என்னிடம்
பொய் சொல்கிறாய் என்று
சந்தேகிக்க தொடங்கிய
பிறகு
என்னிடம் ஏராளமான
உண்மைகளை
சொல்லத் தொடங்கினாய்.
-மனுஷ்யபுத்திரன்
[08/06, 7:56 pm] TNPTF MANI: சந்தோஷம்னா என்னென்னு மனுஷனுக்கு அத அனுபவக்கையில தெரியாது.... அதெல்லாம் போனப்பறம் தான் தெரியும்...
-கமல்ஹாசன்
(விருமாண்டி)
No comments:
Post a Comment