Friday, 17 August 2018

மணி

[23/06, 7:02 am] TNPTF MANI: நம்முடைய
கூலிங் கிளாஸை
எடுத்து அணியும் போதும்

நம்முடைய                 

செருப்பை அணிந்து
நடை பயிலும் போதும்

நம்முடைய
சட்டையை எடுத்து
மாட்டிக்கொள்ளும் போதும்
                                                                                     

நாமாக மாற
முயற்சிக்கிறது குழந்தை.

அதை ரசிக்கும்
பொழுதுகளில்
குழந்தையாக
மாறி விடுகிறோம்
நாம்..!”
                  -  ந. சிவநேசன்.
[23/06, 7:11 am] TNPTF MANI: உன் முந்தானையால்
தலை துவட்டி விடுவாய்
என்பதற்காகவே
குடை மறந்து
வந்த மழைநாளில்
ஜீன்ஸும்
டிஷர்டுமாய்
நின்றிருந்த உன்னை
என்ன சொல்லி
திட்டுவது

-யுகபாரதி
[23/06, 7:14 am] TNPTF MANI: கணக்கு டீச்சர் கணக்கு பாடம் நடத்துவதை விட கொடுமையானது அதை நம்ம முகம் பார்த்து நடத்துவது.!
[23/06, 8:45 am] TNPTF MANI: நீங்கள் அழகு என்றால் என்ன நினைக்கின்றீர்களோ தெரியாது
யாரைப் பற்றி நினைத்தால் மனதிற்கு இன்பமாக இருக்குமோ
அவர்கள் எல்லாம் அழகானவர்கள் தான்.

ஜெயகாந்தன்
[23/06, 3:01 pm] TNPTF MANI: முன்னால்:

முன்னால் போவது
எப்போதும் ஒரு வசதி
திரும்பிப் பார்க்க நேரும்
யாரும் வரவில்லை என்றால்
"முன்னால்" என்பதன்
புது அர்த்தம் புரியும்
புல்பூண்டற்ற வெட்டவெளியும்
வெயில் கொளுத்தும் வெட்டவானமும்
உன்னை என்ன செய்வதென்று
தவிக்கும்
    -அபி
[24/06, 7:55 pm] TNPTF MANI: உருவியதும் தெரியாமல்
சொருகியதும்  தெரியாமல்
ஒரே குத்து...
ஒரே ஒரு குத்து....

எவ்வளவு பெரிய
கருணை இது

குத்திடுவேன்...
குத்துடுவேன் என்று
சும்மா மிரட்டாதே
கொலைகாரா!!

#இசை
[24/06, 8:00 pm] TNPTF MANI: என் மனதுக்கு நெருக்கமான வாசிப்பு.....

புத்தகம்: இறுதிச் சொற்பொழிவு
ஆசிரியர்:ரேன்டி பாஷ்… தமிழில்: நாகலெட்சுமி சண்முகம்.
“மரணம் எதைப்பற்றியும் கவலைப்படாத ஒரு கோமாளி” என எங்கோ படித்ததாக நியாபகம்.
அமெரிக்காவின் கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தில் அவ்வப்போது இறுதிச்சொற்பொழிவு என்னும் தலைப்பில் முக்கியமானவர்கள் சொற்பொழிவாற்றுவார்கள். “நீங்கள் இன்னும் சில நாட்களில் இறந்துவிடப் போகும் சூழல் என்றால், இது தான் நீங்கள் ஆற்றும் கடைசி சொற்பொழிவென்றால் நீங்கள் மாணவர்களுக்கும், சமுதாயத்திற்கும் சொல்ல விரும்பும் தகவல்கள் என்ன?”. இதுதான் இறுதிச்சொற்பொழிவின் அடிநாதம், இத்தலைப்பிலேயே நீங்கள் பேச வேண்டும். பல பேராசிரியர்கள் தங்களை அவ்வாறு விரைவில் இறந்து போகப்போகிறவர்களாகக் கற்பனை செய்து கொண்டு பேசுவதுண்டு. ஆனால்……
இப்போது பேச இருப்பவரோ உண்மையில் இன்னும் ஆறுமாதத்தில் கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்து போகப்போகும் புகழ்பெற்ற  கணினிப் பேராசிரியர் ரேன்டி பாஷ். மருத்துவரால் கைவிடப்பட்டு சாவுக்கு இன்னும் ஆறுமாதம் என நாட்குறிக்கப்பட்டவர். மனைவி, மூன்று குழந்தைகள் என அழகாய் சென்று கொண்டிருந்த வாழ்க்கைப் பயணத்தில் குடும்பத்தலைவர் ரேன்டிக்கு புற்றுநோய் என்னும் தகவல் இடியாய் இறங்குகிறது. நிலைகுலைந்து போகிறது குடும்பம். இருக்கின்ற காலம் வரை மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற நம்பிக்கையில் மீண்டு வருகிறார் ரேன்டி.
அப்போது இந்தச் சொற்பொழிவில் பேச கேட்டுக்கொள்ளப்படுகிறார். இந்த சொற்பொழிவில் பேசிய மற்றெல்லாரும் தாங்கள் விரைவில் இறந்துபோகப் போவதாகக் கற்பனையாகப் பேச, உண்மையில் விரைவில் இறந்து போகப்போகும் ஒருவரின் பேச்சாக அமைந்தது ரேன்டியின் சொற்பொழிவு. தன் பெற்றோர், இளமைக்காலம், சகோதரி, தன் கல்வி, பணி, மனைவி, குழந்தைகள், நட்பு, நோய் மற்றும் சிகிச்சைகள் என இளமைக்காலந்தொட்டு தற்போது வரையான தன் வாழ்வின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை தன் சொற்பொழிவில் வழங்குகிறார் ரேண்டி.. இது இந்நூலின் முதல் நான்கு பாகங்களில் வருகிறது.
எளிதாக இதை நான் எழுதிவிட்டேன். ஆனால் ரேன்டியின் வார்த்தைகளை எழுத்துவடிவில் இந்நூலில் படிக்கும்போது ஒரு இனம்புரியாத சோகம். நூலின் ஐந்தாவது மற்றும் ஆறாவது பாகங்களில் தனது வாழ்க்கை அனுபவங்களைச் சொல்லிச் செல்கிறார். இந்த அத்தியாயங்களின் வழியே ஒரு மனிதன் தன் காலத்திற்குப் பின் இச்சமுதாயத்திற்கு விட்டுச் செல்லக்கூடிய தகவல்கள் தெரிய வருகின்றன. இவை ரேன்டியின் மரண வாக்குமூலங்கள். இப்பகுதிகளிலிருந்து நமது வாழ்விற்குத் தேவையான பல நல்ல விஷயங்களைக் கற்றுக் கொள்ளலாம்.
இதில் ஐந்தாவது அத்தியாயமான “உங்கள் வாழ்க்கையை எவ்வாறு வாழ்வது என்பதைப் பற்றியது இது” என்பதில் ஏராளமான வாழ்வியல் அனுபவங்களைப் பெறலாம்.
1. உங்கள் குழந்தைகளை பெரிய கனவைக் காணச் செய்யுங்கள்.
2. பகட்டைவிட உள்ளார்ந்த ஆர்வம் உன்னதமானது.
3. குறை கூறாதீர்கள்,  கடினமாக உழையுங்கள்.
4. நோய்க்கு சிகிச்சை அளியுங்கள், அறிகுறிக்கு அல்ல.
5. மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதில் அதீத கவனம் செலுத்தாதீர்கள்.
6. அனைவரிடத்திலும் உள்ள சிறந்த விஷயத்தைத் தேடுங்கள்.
7. அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதைப் பார்ப்பதற்குப் பதிலாக, அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பாருங்கள்.
8. மறக்கப்பட்டுவிட்டக் கலையான நன்றிக் குறிப்புகள்.
9. விசுவாசம் என்பது ஓர் இருவழிப்பாதை.
10. நன்றியை வெளிப்படுத்துங்கள்.
11. நீங்கள் உங்களோடு என்ன கொண்டு வருகிறீர்களோ, அது மட்டுமே உங்களுக்குச் சொந்தம்.
12. மோசமாக மன்னிப்புக் கேட்பது, மன்னிப்புக் கேட்காமல் இருப்பதைவிட மோசமானது.
13. எந்த வேலையும் தரக்குறைவானது அல்ல.
14. நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
15. ஒரு போதும் முயற்சியைக் கைவிடாதீர்கள்.
இன்னும், இன்னும் பல அனுபவ மொழிகள்.
கடைசி அத்தியாயமான இறுதிக் குறிப்புகளில், தன் மனைவி மற்றும் குழந்தைகளுக்குமான மொழிகளுடன் தன் சொற்பொழிவை நிறைவு செய்கிறார். ரேன்டி அவர்கள் வழங்கிய இறுதிச் சொற்பொழிவை இணையாசிரியராக இருந்து எழுதியுள்ளார் ஜெஃப்ரி ஜாஸ்லோ. இதனை தமிழில் வாசிப்பதற்கேற்ற மிக எளிமையான நடையில்  மொழியாக்கம் செய்துள்ளார் திருமதி.நாகலட்சுமி சண்முகம்.
தனது வாழ்நாளின் கடைசிப்பகுதியில் வாழும் ஒருவரின் வாழ்வைச் சொல்லும் இந்நூலைப் படித்துப் பாருங்கள்… நிச்சயம் புதிய வாசிப்பனுபவமாக இருக்கும்.
“மீண்டும் மீண்டும்
பலரது  மரணங்களைக் கண்டபோதும்
மரணம்
பயமுறுத்தவே செய்கிறது.”
நன்றி!

புத்தகம்: இறுதிச் சொற்பொழிவு
ஆசிரியர்:ரேண்டி பாஷ் தமிழில்:நாகலட்சுமி சண்முகம்.
வெளியீடு:மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ் ((2013தமிழில்)
விலை:199/- பக்கங்கள்:312.
இவண்:
இராமமூர்த்தி நாகராஜன்.
[25/06, 7:28 am] TNPTF MANI: திரு பாரத் பாரதி பதிவிலிருந்து

💥ஒரு கிராமத்துப்பள்ளி
ஆசிரியையாக இருப்பதென்பது.

💥மூன்றாம் வகுப்பு
பச்சையப்பனின் அரைஞாண்
கயிற்றிலாடும்
வீட்டுச்சாவியை
அவனின் அம்மா தவிர
யாரும் தொடாமல்
கவனிக்க வேண்டியிருக்கிறது.

💥அடிக்கடி வலிப்பு வருகிற
முனியப்பனின் வாயைத்துடைத்து
அவன் பெற்றோர் வரும் வரை
தவிக்க வேண்டியிருக்கிறது.

💥தத்தித்தத்தி நடந்து வந்த
ஸ்வேதாவை லீடராக்கி
அவளையும் வகுப்பிலொருத்தியாய்
மாற்றிக்காட்ட வேண்டியிருக்கிறது.

💥பேசுவதறியா வார்த்தைகளையெல்லாம்
மறக்க வைத்து
நல்லதை சொல்லப் பழக்கவேண்டியிருக்கிறது.

💥இரவுச்சண்டையில்
வாங்கின அடியில்
ஊருக்குப்போக டி.ஸி கேட்கிற
சர்மிளா அம்மாவை
தடுக்க வேண்டியிருக்கிறது.

💥அரசின் சலுகையைப்பெறுவதற்காக
கார்த்திகாவிற்கு வங்கிக்கணக்கு
தொடங்க வேண்டியிருக்கிறது.

💥படிக்க ,எழுத
கற்பிக்கும் போதில்
கடிந்ததை மறந்து,
குல்மொஹர் மரத்தடி
வகுப்பறையருகே
காத்திருக்கும்
இவர்களுக்காக
தவிர்க்க இயலா காரணம்
தவிர வேறெப்போதும்
விடுப்பெடுக்க யோசிக்க
வேண்டியிருக்கிறது.

- சரஸ்வதி காயத்ரி.
[25/06, 7:30 am] TNPTF MANI: ஒரு பறவை இதைவிட
எடையுள்ளதாக இருக்கும்’
கை நினைத்தது.
‘ஒரு கை இதை விட
மென்மையாக இருக்கும்’
பறவை நினைத்தது.
எல்லாம்
அமர்ந்து பறந்த
சிறுகணத்துக்குள்.
- வண்ணதாசன்
[25/06, 7:30 am] TNPTF MANI: கால்பந்து
*மணி

சுந்தர ராமசாமியின் நாடார் சார் கதையை படித்துக்கொண்டிருக்கும் போதே கால்பந்து விளையாடிய அனுபவத்தை எழுத ஆசை பிறந்தது.1995ல் திருப்பூர் பிஷப் பள்ளியில் (ஆடவர் பள்ளிதான்) ஆறாம் வகுப்பு  பயிலும் போதுதான் முதல் முதலில் கால்பந்தை கையில் தொட்டுப்பார்த்தது அப்போதுதான்.ஆறாம் வகுப்பு E பிரிவில் 110பேர் இருந்தனர்.செவ்வாய்,வியாழனில் பி.டி வகுப்பு.அப்போது பந்து பற்றாக்குறையாய் இருந்ததால் யாராவது ஒரு மாணவன் பந்து கொண்டுவந்தால் அவர்களை விளையாட சொல்லிடுவாங்க..

*நான்கு அணிகளாக பிரித்து இரண்டு அணிகள் சேர்த்து விளையாடும் படி அறிவுறுத்தப்பட்டது.

*பந்திற்கு காற்றடிப்பது என்பது கலை.அதை திறம்பட செய்து,அதிக காற்றடித்ததால் ஆரஞ்சு நிற ப்ளாடர் வெளியே தெரிந்தது.

*விளையாட்டு தொடங்கியது..சங்கிலியை பறிச்சிட்டு ஓடுற திருடனை விரட்டுற மாதிரி,ஒரு பந்தின் பின்னால் 110பேர் ஓடினோம்

*பந்தை அடித்தால் வெளியே வராது.கால்களின் இடிபாட்டில் சிக்கி அய்யோ என்னை விட்டிறுங்கடா என பந்து கதறியது.

*சுதந்திரமாய் பந்து ஓடியதே குறைவுதான்..ஏற்கனவே விளையாடிக்கொண்டிருக்கும் அண்ணன் கள் உதைக்க,பாத்ரூம் போகும் சிலர் உதைப்பதும்,வேடிக்கை பார்ப்பவன் எத்துவதும் தொடர்ந்தது

*இதற்கிடையில் சீரியல் விளம்பரம் மாதிரி அடிக்கடி கைபட்டு ஹேண்ட்ஸ் ஆயிடும்."அவே" போயிடும்.அதை தூக்கி வீச வியூகம் பார்ப்பாங்க.என்னவோ ரொனால்டோ மாதிரி

*இதுக்கிடையில் பந்துக்கு சொந்தக்காரன் பந்தை கையிலெடுத்து பரிவோடு தடவிக்கொடுத்து பிஞ்சிருக்கானு பார்ப்பான்.மெதுவாய் உதைங்கடா,இல்லனா எடுத்திட்டு போயிடுவேனு மிரட்டுவான்.அவனுக்கு கோலி சாட் குடுத்து உற்சாகப்படுத்துவோம்

*கோல் கீப்பர் னு ஒருத்தன் இருப்பான். பாலே வராது.சும்மாவே தேமேனு இருப்பான்.நூறுபேர் காலில் சுத்திய கருநாகம் போல் பால் கிரவுண்டிலேயே இருக்கும்.அவன் உட்கார்ந்து மண்ணில் விளையாடிட்டு இருப்பான்

*பிரேமா ஸ்கூலில் இருந்து வந்த நரேஷ் தான் முதலில் ஸ்போர்ட்ஸ் ஷீ அணிந்து வந்திருந்தான்.அதிசயமா இருக்கும்.போய் தொட்டுப்பார்ப்போம்.
அவன் ஓடுவதையே பார்த்து ஷீ அழகை ரசிப்போம்

*சிலர் கடைசிவரை கால்பந்தை ஒருதடவையாவது உதச்சிடனும்கிற வைராக்கியத்தில் முக்கால்மணி நேரம் பந்து பின்னாடியே ஓடுவாங்க

*பந்து கிடைக்காத விரக்தியில் சாமியாராய் போற மாதிரி,மைதானத்தில் உலாத்திட்டு இருப்பானுக,தென்னமட்டை எடுத்திட்டு  கிரிக்கெட் விளையாடுவாங்க, கோல் கீப்பரை மாற்றிவிட்டு சமயத்து கோலி னு புது டெக்னிக் அறிமுகமாகும்.யாரு வேணா பந்து பிடிக்கலாம்

*கடைசியில் விளையாட்டு முடியும்போது,கொஞ்சம் பிய்ந்திருந்த ப்ளாடர் முழுதாய் வாய்திறந்து பந்து வெடித்து கிழிந்தது.அந்த பந்தின் சொந்தக்காரன் எல்லாரையும் திட்டி மண்ணை வாரி தூற்றி அழுதிட்டே வகுப்புக்கு போனான்

*பல்லுக்கு மெதுவாய் பணியாரமாய் கொடுப்பது போல,காலுக்கு இதமான கால்பந்து சிறுவயதில் கிடைக்கல அந்தக்கால பள்ளிகளில்

*எந்தப் பொறுப்பும் இல்லாமல் சுதந்திரமாக விளையாடிய நிலாக்காலம்

*விளையாட்டாகவே கழிந்த விளையாட்டு பாடவேளை அது

தோழமையுடன் மணிகண்டபிரபு
[25/06, 12:51 pm] TNPTF MANI: படைப்பு என்பது பூக்குழி மிதிப்பது.
அங்கீகாரம் என்பது ஆள் வைத்து அடித்துப் பறிப்பது. 
--நாஞ்சில்நாடன்
[25/06, 12:55 pm] TNPTF MANI: உணவு, உடை வீடு ஆகிய மூன்றுமே மனிதனுக்கு எளிமையாகக் கிடைக்கவேண்டும்.
அவற்றுக்காக அவன் வாழ்நாள்முழுக்க போராடக்கூடாது.

-காந்தி
[25/06, 7:30 pm] TNPTF MANI: காலத்தை என்ன செய்ய?
பேனாவைக் கைக்குட்டையைத்
தொலைப்பது போல் காலத்தைத்
தொலைக்க முடியவில்லை.
காலம் காட்டும் கடிகாரம்
காலம் பற்றி அறிந்ததில்லை.
பறப்பன, ஊர்வன, பஸ் ஸ்டாண்டில்
படுத்திருக்கும் பரமசாதுப் பசுக்கள்,
முகம் பார்க்கும் கண்ணாடிக் குருவிகள்
எதற்கும் காலம் பற்றிய
ஓர்மையில்லை; என்னைத் தவிர.
விழித்தாலும் உறங்கினாலும்
வீணே என்னுடனிருக்கும்
காலத்தை என்ன செய்ய?

- வண்ணநிலவன்
[25/06, 10:31 pm] TNPTF MANI: எனக்கு வேடிக்கை பார்க்கறது ரொம்பப்பிடிக்கும்.
மணிக்கணக்காக ஒண்ணு ஒண்ணையும் பார்த்துக் கொண்டே இருப்பேன்.நேற்று பார்த்ததையே இன்றைக்கும் பார்த்துக் கொண்டு இருப்பேன்.அதிலே எனக்குச் சலிப்பு இல்லை. மாறாக வேடிக்கை பார்ப்பதே சந்தோசம்.
நான் சொல்ல வந்தது என்னவென்றால் எனக்குச் சந்தோசம் தர்றது என்ன என்று தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறேன்

-சா.கந்தசாமி
(சாயாவனம்)
[26/06, 7:17 am] TNPTF MANI: பார்க்க வைக்கிறது உன் அழகு.
பார்க்க அனுமதிக்கிறது உன் புன்னகை.

-ராஜாசந்திரசேகர்
[26/06, 7:38 am] TNPTF MANI: "செருப்பு பிஞ்சிரும்" என்றால் உன்னோடு நான் வரும் பயணம் அவ்வளவு  நீண்டது என பின்னாளில் விளக்கம் கூறக்கூடும்!"

-இளந்தென்றல்

No comments:

Post a Comment