கற்றதும் பெற்றதும்-64
*மணி
நதி அமைதியாக உறைந்திருக்கிறது.
மலைகள் நீந்திக் கொண்டிருக்கின்றன
-ஜென்
#ஜென் கதைகள்
ஆரம்ப நிலை வாசகர் முதல் முதிர்ச்சி அடைந்த வாசகர் வரை விரும்பி படிப்பது ஜென்.மனித மனங்களின் யதார்த்தத்தை, வாழ்வின் புரிதலை எளிமையான வரிகளில் சொல்லும்போது உண்மையில் அகக்கண் திறக்கும். சிந்தை தெளிவடையும்.அவ்வகையில் இப்புத்தகத்தில் நான் ரசித்த கதைகளும் வரிகளும்
#ஜென் என்றால் என்ன?
ஒரு மீன் குஞ்சு பெரிய மீனிடம் கேட்டது.கடல் என்பது என்ன? அதற்கு கடல் என்பது உனக்குள்ளும்,சுற்றிலும் இருக்கிறது.உன் உடலின் தோலைப்போல அது உன்னைப் பொதிந்து வைத்திருக்கிறது. மக்களும் அதுபோல் என்கிறார்.கன்பூஷியஸ்.
வேறுபடுத்திப்பார்ப்பது, பொய்த்தோற்றங்களை கைவிடுவது என எல்லா எண்ணங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும்போது..வருவது.தொடர்ந்து படிக்கும்போது உணரலாம் என்கிறார்
#சொர்க்கத்தின் கதவுகள்
ஒருவன் இறந்த அடுத்தகணமே தோன்றக்கூடியது சொர்க்கம் நரகமல்ல.ஒரு கணம் தோன்றி மறையும் எண்ணத்தில்தான் நன்மையும் தீமையும் உறைந்திருக்கின்றன என ஜென் குருவும் படைத்தளபதி கதை கூறுகிறது.
#தெரியாத இடத்தில் தெரிந்தது போல் காட்டுவது நம்மில் பலருக்கு வாய் வந்த கலை.
அதைபடிப்படையாய் வைத்து
"ஒரு ஓவியர் சிவப்பு மூங்கில் வரைந்தாராம்.ஒருவன் வந்து இது கருப்பு வண்ணதில் இருந்தால் நன்றாய் இருக்கும் என்றானாம். அது எங்கிருக்கிறது எனக் கேட்டபோது வாயடைத்தானாம்.
"அடுத்தவர்களின் தவறுகளை நீ சுட்டிக்காட்டும்போது, உண்மையான பிழை உனது தவறான கருத்தில் மறைந்திருக்கக்கூடும்"!
#சிறிய ராணுவம் கொண்ட படை பெரிய நாட்டின் மீது போர் தொடுக்கிறது.வீரர்களுக்கு நம்பிக்கை அளிக்க மன்னன், நாணயத்தை சுண்டுகிறான்.பூ விழுந்தால் புறக்கணிப்பது, தலை விழுந்தால் முன்னேறுவது. சுண்டியவுடன் தலை விழுந்தது. முன்னேறி போர்புரிந்து நாட்டை கைப்பற்றுகிறார்கள். வீரன் சொல்கிறான் எல்லாம் கடவுள் செயல்.
கடவுளின் விதியை மாற்றமுடியாது என்கிறான். மன்னர் தன்னிடமுள்ள நாணயத்தை காண்பிக்கிறார். இரண்டு பக்கமும் தலைதான் உள்ளது
"தெய்வம் எல்லோரையும் ஒன்றுபோலவே பார்க்கிறது.அது குறிப்பாக எவருக்கும் உதவுவதில்லை.உனக்கு உதவ ஒரு ஆள் உண்டென்றால் அது நீயும் உன் தன்னம்பிக்கையும்தான்.!
#துறவிகுன்றுகளில் வேலை செய்து கொண்டிருக்கும்போது மடாலயத்துக்கு வழி கேட்கிறார். இந்த அரிவாளை பாருங்கள் என்றதும் கோபம் வந்துவிட்டது துறவிக்கு.இப்படியே உரையாடல் வளர்கிறது
"தோற்றத்தால் முக்கியத்துவம் கொடுக்கும்போது நாம் உண்மையைப் பார்க்க தவறுகிறோம்.நாம் தேடுவது பார்வையில் பட்டாலும் அதை பெயர்களுக்கும் பதவிகளுக்கும் அதிக கவனம்.கொடுத்தால், நாம் முற்றிலும் தவறவிட்டு விடுவோம்
#‘நான் நல்லா வாழ்ந்தேன்னு ஒருத்தன் சொல்றான்னா, அவனோட வயசு என்ன?’ என்று கேட்டார் புத்தர்.
அவரது சீடர்கள் யோசித்தார்கள்.
‘ஒரு நல்ல வாழ்க்கையோட ஆயுள் காலம் என்ன?’
‘நூறு வயசு?’ என்றார் ஒரு சிஷ்யர்.
‘ம்ஹூம். இல்லை!’ என்று உடனே மறுத்துவிட்டார் புத்தர்.
‘அப்படீன்னா? 90 வயசு?’
‘அதுவும் இல்லை!’
‘80? 70? 60?’ இப்படிச் சீடர்கள் வரிசையாகப் பல விடைகளைச் சொல்ல, புத்தர் எதையும் ஏற்கவில்லை. கடைசியாகப் பொறுமையிழந்த அவர்கள் ‘நீங்களே சொல்லுங்க’ என்று அவரிடம் வேண்டிக்கொண்டார்கள்.
‘ஒரு நல்ல வாழ்க்கை-ங்கறது, ஒரு விநாடிப் பொழுதுதான்!’ என்றார் புத்தர்.
‘என்ன சொல்றீங்க குருவே? ஒவ்வொரு விநாடியையும், அதுதான் உங்களுடைய வாழ்க்கையின் தொடக்கம் என்று நினைத்து அனுபவிக்கவேண்டும். பழையதை நினைத்துக் கவலைப்படக்கூடாது. கடந்தகாலத்தில் வாழக்கூடாது!’
‘அதேநேரம், அந்த ஒரே விநாடியை உங்களுடைய வாழ்க்கையின் முடிவு என்றும் நினைத்துக்கொள்ளவேண்டும். எதிர்காலக் கற்பனைகளில், எதிர்பார்ப்புகளில் அந்த விநாடியை வீணடிக்கக்கூடாது.’
‘சுருக்கமாகச் சொன்னால், நாம் ஒவ்வொரு விநாடியும் புதுசாகப் பிறக்கிறோம், அதை முழுமையாக அனுபவிக்கிறோம். அதுதான் நல்ல வாழ்க்கை. அதுதான் ஜென் வாழ்க்கை!’
#முதியவர் ஒருவர் குதிரையில் பயணிக்கையில் வழியில் ஒருவன் மயங்கிக்கிடந்தான்.உதவி செய்ய இறங்கியவுடன் அவன் சாதுர்யமாக திடுமென எழுந்து குதுரை சந்தைக்கு ஓட்டிக்கொண்டு சென்றான்.செய்வதறியாது விழித்த பெரியவர், அவனை அணுகி.. "இதை யாரிடமும் சொல்லாதே" சொன்னாயானால் இனி மயங்கிக் கிடப்பவர்க்கு யார உதவ முன் வரமாட்டார்கள் என்றார்.
#மனம் கவர்ந்தவை
*உனக்கு எது விருப்பமோ அதை எடுத்துக்கொள்.இல்லை வெறுமனே பார்த்தால் போதும் என்றால் முழுமனதுடன் பார்.
*புறப்பொருளை கைப்பற்றும்போது நாம் அகத்தை இழக்கிறோம்
*எந்த ஒரு மாணவனுக்கு எதையும் போதிக்க முடியாது. ஆனால் ஒவ்வொரு மாணவனுக்கும் தனது சுய சிந்தனையால் எல்லாவற்றையும் புரிந்து கொள்வதற்கு அவரால் உதவ முடியும்.
#கதைகளின்.வழியே பழக்கப்பட்ட மனது நம்முடையது.ஒரு கதையின் நுனியை பிடித்து ஏறிச் செல்வது போல் அதை படித்து செல்லும்போது இறுதியில் காணும் நீதி..உண்மையில் பரவசப்படுத்துவது.இது மனதை பண்படுத்தும்.அறியாமையை சற்று சீண்டும்.ஒரே பக்கத்தில் இருப்பது இன்னும் கூடுதல் வசதியாய் எளிமையாய் படித்துவிட உதவும்.
மனிதன் பக்குவபட வேண்டிய அடிப்படை நீதியை உணர்த்தும்.
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment