Sunday, 16 December 2018

ரிவிசனுக்கு படிப்பது

ரிவிசனுக்கு படிப்பது

ரிவிட் அடிப்பது

-மணி

பொதுவா பரிட்சை வந்தாலே பசங்களுக்கு ஆகாது.வாத்தியார் என்னதான் தெலுங்கு பட வில்லன் மாதிரி கத்திக்கிட்டு இருந்தாலும் நம்ம பசங்க மகேந்திரசிங் தோனி மாதிரி அமைதியா இருப்பாங்க.. எத்தனை கத்துனாலும் அப்புறம் "வேலக்கார பெருமாள் மகளுக்கு என்னாச்சுங்கிற மோடிலேயே இருப்பாங்க.இதில் சில குருப்புக்கள் பேசியே மரணமாஸ் காட்டுவாங்க.அவங்களுக்கு டாட் வைக்க என்ன பன்னனும்னா எலுமிச்சம் பழத்தை நாலா நறுக்கி நாலு மூலைக்கு போடுற மாதிரி.. நாலு பக்கம் உட்கார வச்சாலும் அங்க போயும் புது பசங்களை ப்ரண்டு புடுச்சு பேசுவாங்க.இப்பிடி என்னவெல்லாமோ நடக்கும்.

#ரிவிசன் டெஸ்ட்டுக்கு படிக்க வைக்கும்போது என்ன நடக்கும்

*வீட்ல டயர் வண்டி ஓட்டி கேள்வி எழுதலைனாலும்..அடுத்த நாள் வந்து அத்தை வீட்டுக்கு போய்ட்டேன்,கோவிலுக்கு போய்ட்டேன் என கூசாம பொய் சொல்லனும்

*படிக்க சொன்னால் முதலில் வரவேண்டியது தண்ணி தாகம்.போய் வாட்டர் கேனை எடுத்து வாயில் வைத்து சிக்கல் சண்முகசுந்தரம் மாதிரி நின்னு ஒரு 20நிமிசம் எடுக்கவே கூடாது.

*படினு சொன்னதும் நினைவுக்கு வருவது உடன்பிறப்பு.

தம்பி,தங்கச்சிகிட்ட ரப்பர்,ரூல் பென்சில் வாங்க அவன் வகுப்புக்கு போவது.அவனும் காவிரிதண்ணியை எதிர்பார்க்கிற டெல்டா விவசாயி மாதிரி இவனை எதிர்பார்த்து காத்திருந்து.. இவனுக்கு பென்சில் கொடுத்திட்டு பதிலுக்கு அவன் ஒரு பொருளை கொடுத்து கொஞ்ச நேரம் கழிச்சு வருவான்.

*படிக்க சொன்னதும் டைம் பாஸ் செய்வதில் முக்கிய விசயம் பேக்கில் தலையை விட்டு தேடுவது. எல்லா புக்கை எடுத்து வெளிய வச்சு மறுபடி எடுத்து உள்ளே வைத்தால் சூப்பரா டைம் பாஸ் ஆகும்

*எழுதும்போது கேள்வி மறந்தால் டிப் ரூல் கழட்டி ஒவ்வொன்னா மாட்டுனா..எழுதிற மாதிரியே தெரியும்.ஆனா ஈசியா டைம் பாஸ் ஆகும்

*பாத்ரூம் பெல்லுக்கு பாத்ரூம் போறவன்.முட்டாள்.பெல் அடிச்சு எல்லாரும் உள்ளே வந்த பிறகு வெளிய தனியா போய் உலாத்துவது தனி இன்பம்

*யாருக்காவது பல்லு விழுந்தா செம என் ஜாய்.அவனை ஒரு தத்து பிள்ளை மாதிரி தாவிக்கிட்டு போய் அந்த பல்லை ஆராய்ச்சி பன்னி அதை பத்திரமா ஒரு பேப்பர்ல கட்டி குடுத்தா தான் மனசு ஆறும்

*படிக்கச் சொன்னா பக்கத்தில் இருக்கிறவன் முகத்தை பார்த்து ரசிப்பது.

*பசங்க பேரன்ட்ஸ் வந்தால் அவங்க பையனிடம் கூட்டிக்கொண்டு போய் சேர்ப்பது..

பாகிஸ்தான் தீவிரவாதிகளை புடிச்ச ஜெயில்ல போட்ட விஜயகாந்த் மாதிரி பெருமிதம் ஏற்படும்

*கொஸ்டின் பேப்பரை கொடுத்தால் கல்வெட்டு ஆராய்ச்சியாளன் மாதிரி ஒவ்வொரு எழுத்தாய் கவனிப்பது

*ஒன்னுமே தெரியலனா கேள்வியவே புடிச்சு எழுத வைப்பது.சில அந்நியன் அம்பிகள் ஆர்வகோளாறில் காலம் 2 மணி, இரண்டாம் பருவத்தேர்வு, மதிப்பெண் 60 னு கூட எழுதுவாங்க

*பதில் தெரியலைனா அடுத்த பக்கத்தில் இருப்பதை  தூக்கி எழுதுவது

*எக்காரணம் கொண்டு கடைசிவரை பேப்பர்ல பேர் எழுதக்கூடாது.திஸ் ஈஸ் ட்ரங்கன் மங்கி ஸ்டைல்.யார்ரா சிவானு கத்து கத்துனு கத்தின பிறகு கடைசி ஸ்ட்ரோக்கில் வேற வழி இல்லாம..அப்பாவியாய் உண்மைய ஒத்துக்கிறது

*ஒரு வார்த்தை எழுதனும்.அதை அழிக்கனும்.அப்புறம் அதையே திரும்ப திரும்ப செய்தால் ஈசியா டைம் பாஸாகிடும்.

*எலக்சன் பூத்தில மை டப்பாவை தட்டிவிட்டா எப்பிடி லேட்டா ஆகுமோ அந்த மாதிரி..ஒரு வாட்டர் கேனை மூடியை லூசா போட்டு வச்சிக்கனும்.அப்புறம் அதை தட்டிவிட்டா போதும். ஒரு அரை மணிநேரம் அலெக்கா போயிடும்

*வாய்க்குள்ள நிக்கலு நிக்கலுமா,தரைல உட்காருமானு பாட்டை சைலன்டா பாடுனா.. வாய்ப்பாட்டை சொல்லிப் பார்க்கிறமாதிரியே இருக்கும்

*கொஞ்சம் போர் அடிச்சா தலைவலி, வயித்துவலி னு படுத்துக்கனும்.

#அந்தக்காலத்தில் இதெல்லாம்.செய்திருந்தாலும் கூட சார் மேல கொஞ்சம் பயம் இருந்தது. அந்த பயம் கொஞ்சம் படிக்க சொல்லுச்சு.படிக்கும்போது கான்சென்ட்ரேசன் அதிகமாச்சு. பெரிய கேள்வி வந்தால் கூட எழுதனும்கிற தன்னம்பிக்கை இருந்துச்சு.

கட்டுப்பாடற்ற சுதந்திரம்..இப்போதைய மாணவர்க்கு படிக்கனும்கிற பிடிப்பு இல்ல.இந்த எக்சாம் இல்லைனா அடுத்த எக்சாம்.சம்பாதித்து போடும் பெற்றோரை நீ பெத்தால் நீ தான் செலவு செய்துதான் ஆகனும்னு பார்க்கிறாங்க.பொறுமை இல்லாததால் பொறுப்பு இருப்பதில்லை சிலரிடம்.தேர்வு ஒரு சடங்கு மாதிரி வந்து போகுது. அதன் பின்னால் வரும் விடுமுறை ஒன்றே தேர்வை மதிக்க ஒரு காரணம்.இதனை எல்லாம் உணரும்போது காலம் கடந்திருக்கும்.

-மணிகண்டபிரபு

No comments:

Post a Comment