# சிக்கிக்காம தப்பிச்சுட்டோம்னா
எந்த தப்பும் நம்ம ஞாபகத்தில் இருப்பதில்லை
-நடிகர் பிரகாஷ்ராஜ்
#எல்லோரும்
தப்புத்தப்பாகவே வரைகிறார்கள்
வண்ணத்துப்பூச்சியை
அதனழகு
அதில் மிதக்கும் வண்ணங்களில்லை
படபடக்கும்
சிறகிலிருப்பதை உணருவதேயில்லை பலரும்
ஆயினும்
வரை வோவியத்தில் பார்த்தஉடனே
தவறாமல்
படபடக்கத் தொடங்கிவிடும் எல்லோர் மனதிலும்
-விஷ்ணுபுரம் சரவணன்
# அவை அஞ்சி மெய் விதிர்ப்பார் கல்வியும்,
கல்லார் அசையஞ்சா ஆகுலச் சொல்லும் பூத்தலின் பூவாமை நன்று.
*ஒருவர் எத்தனை அறிவு பெற்றிருந்தாலும் அவை அஞ்சாமை இல்லை எனில் எக்கருத்தையும் எடுத்தியம்ப இயலாது.அடுத்தவர் அறிவற்றவர்..இவர் ஆரவாரச் சொற்களை மட்டும் உதிர்ப்பார்கள்.இருவரும் அவைக்கு வராததே நல்லது
-குமரகுருபரர்
#கருணை என்பது கிழங்கின் பெயராக மட்டும் நிலைத்துவிட்டது
-புதுமைப்பித்தன்
-உலக கருணை தினம்
No comments:
Post a Comment