செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்
ஆன்ற பெரியோ ரகத்து
*சேர்ந்த நகை என்றால், ஒருவன் காதுக்குள் ஒரு இரகசியத்தை சொல்லிவிட்டு,பிறகு சொன்னவனும் கேட்டவனுமாகச் சிரிக்கக்கூடாது.
மன்னனின் பார்வையிலோ அல்லது அங்குள்ள பெரியோரின் பார்வையிலோ தவறான எண்ணம் ஏற்படக்கூடும்.
#சண்டாளன்
இதனை ஒரு வசைச்சொல்லாக இன்றும் பயன்படுத்துகிறோம்.இது ஒரு சாதியை குறிக்கிறசொல்.மநு வின் படி பஞ்சமர்களை ஊரின் எல்லையில் வைத்துக்கொள்ளலாம்.சண்டாளர்களை ஊருக்குள்ளேயே வைக்கக்கூடாது.
யாரும் உணவோ,நீரோ கொடுக்கக்கூடாது.
பிணத்தின் மேல் போர்த்திய உடையை அணியவேண்டும்.உணவு உண்ண உடைந்த பாத்திரம்தான்.விலங்கினும் கீழாய் நடத்தப்படும் சாதி அது.எனவே இனி இவ்வார்த்தையை பயன்படுத்துவதை தவிர்ப்போம்
-படித்தது
#அதிகாரம் என்பது மனித மனங்களை சுக்கல் சுக்கலாகக் கிழித்துப் போட்டுவிட்டு,நமக்கு ஏற்ற வடிவத்தில் அதை மீண்டும் ஒட்ட வைத்துக் கொள்வதுதான்
-ஜார்ஜ் ஆர்வெல்
#கல்வியேறாத ஆண்தான் எங்கும் கடைநிலைத் தொழிலாளி.
வாழத் துடிக்கும் ஆண் மனம்தான் தாழ்ந்த பணிகளுக்கு இரை
மகுடேஸ்வரன்
No comments:
Post a Comment