கற்றதும் பெற்றதும்-87
*மணி
ஆதிக்க வெள்ளத்தின் அடியில் கிடந்தாலும்-பாதிக்கப்படாத பாஸ்பரஸ் அவன்
-பாரதி குறித்த வலம்புரி ஜான்
#பாரதியின் இறுதிநாட்கள்
-மாலன்
(கயல் பருகிய கடல்)
எழுத்தாளர் மாலன் குறித்து அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடுகள் இருப்பினும் அவர் பாரதிதார் குறித்து அழகிய கட்டுரைகள் எழுதுவார்.புதிய தலைமுறையின் ஆரம்பகால வாசகன் நான்.அதில் ஜன்னலுக்கு வெளியே எனும் தலையங்கத்தில் அடிக்கடி பாரதியார் வெளிப்படுவார். பாரதி குறித்து வலம்புரி ஜானின் பாரதி ஒரு பார்வை முக்கியமான புத்தகம்.
கயல் பருகிய கடல் புத்தகத்தின் இறுதி கட்டுரையில் பாரதியார் குறித்த இறுதிநாட்களை விவரிப்பதாக இக்கட்டுரை அமைந்திருந்தது
#பாரதியார் புகைப்படம்..
ஒரு யானை சிங்கத்தை அடித்தது என வர்ணிப்பார்கள்.ஆனால் பாரதியின் முடிவு யானையால் வந்ததல்ல.யானைச் சம்பவம் நடந்தது ஜூனில்.மறைந்தது செப்டம்பரில்.ஜூலை ஆகஸ்டில் வேலைக்கு போய் வந்தார்.
தான் உடல்நலம் தேறிவிட்டதாய் பாரதிதாசனுக்கு கடிதம் எழுத அவர் நான் நம்பமாட்டேன். புகைப்படம் அனுப்புங்கள் என்றதும் சென்னை பிராட்வேயில் இருந்த ரத்னா கம்பெனிக்கு சென்று 1921ல் படம் எடுத்துக்கொண்டார்.
அதுதான் இன்று பிரபலமான முண்டாசுடன் கூடிய படம்
#மகாகவியின் முடிவு
ரா.அ.பத்மநாபனின் சித்திரபாரதி நூலில்..
1921 செப் முதல் தேதி வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.விரைவில் அது வயிற்றுக்கடுப்பாக மாறியது.செப்டம்பர் 12 அன்று பணிக்கு திரும்புவதாக சக ஊழியர்களிடம் உறுதி அளித்தார். ஆனால் அன்றுதான் இறந்தார்.
வ.வே.சு ஐயர் சிறை சென்றுக்கொண்டிருந்த போது செப் 11 அன்று வழியில் காவலருடன் நலம் விசாரித்து சென்றார்.பாரதிக்கு சிகிச்சை அளித்தவர் டி.ஜானகிராமன்.
ஆந்திரகேசரி டி.பிரகாசத்தின் சகோரரர்.அவரிடம் எனக்கொன்றும் இல்லையென கோபப்பட்டிருக்கிறார்.
மருந்து எடுத்துக்கொள்ள மறுத்திருக்கிறார்.
#11ம் தேதி
யார் மருந்து கொடுத்தாலும் கேளாத பாரதி மகள் சகுந்தலா மருந்து என நினைத்து பார்லி தண்ணீரை கொடுத்துள்ளார்.இதனை கூறி விட்டு பாரதி படுத்துக்கொண்டார். நீலகண்ட பிரம்மச்சாரி,பரவி சு.நெல்லையப்பர்,
லட்சுமண ஐயர் மூவரும் அன்று இரவு இருந்தனர்.
இறப்பதற்கு இரண்டு மணி நேரம் பிரிட்டனுக்கு எதிராக இருந்த ஆப்கன் மன்னர் அமானுல்லா கான் பற்றி எழுத வேண்டுமென இறுதியாகச் சொல்லிவிட்டு மயக்கத்திலிருந்தார்.
இதுவே இறுதியாய் பேசிய வார்த்தைகள். அவர் மறைந்த நேரம் இரவு 1-30மணி
#இறுதியாத்திரை
விடிந்ததும் தகவல் சொல்லி அனுப்புகிறார்கள்.45 கிலோவிற்கு குறைவாய் இருந்த அவரின் உடலை கிருஷ்ணாம் பேட்டை மயானத்திற்கு எடுத்துச் சென்றனர்.மகன் இல்லாததால் பாரதியின் தூரத்து உறவினரான ஹரிஹர சர்மாதான் கொள்ளிவைத்தார் என கூறுகிறார்கள்.
பாரதி படத்தில் வருவது போல் பாரதியால் பூணூல் அணிவிக்கப்பட்ட கனகலிங்கம் அந்திமக்காலத்தில் அருகில் இல்லை என தன் நூலில் எழுதியிருக்கிறார்.
அவரின் மரணம் குறித்து பல கேள்விகள் எழுவதாக கூறுகிறார் மாலன்.செப் 12ல் மதியம் இரண்டு மணியோடு சுதேசமித்ரன் வேலை நிறுத்தபடுவதால் பிரசுரமாகவில்லை என தலையங்கம் வெளியிட்டதாக குறிப்பு உள்ளதாக காணப்படுகிறது.
கற்றதும் பெற்றதும்:
மொழியை மட்டும் பாடிக்கொண்டிருந்தவர் மத்தியில்
சமூக விடுதலை, பெண் விடுதலை குறித்தும் துணிச்சலாய் பாடி கவிஞன் என்பவன் காலத்தின் குரல் என வாழ்ந்து காட்டியவன்.பாரதி எனும் பறவை உதிர்த்த சிறகுகளே அவரின் பாடல்கள்.வானம் அளந்த அந்த பறவையின் சிறகுகளை போற்றி பாதுகாப்போம். அச்சிறகுகள் மூலம் அப்பறவை குறித்த பெருமையை வருங்கால தலைமுறைக்கு உணர்த்துவோம்
தொடர்ந்து வாசிப்போம்
No comments:
Post a Comment