சுகுமாரன் பிறந்ததினம்
@manipmp
*தேவதைகளுக்கு ஜாதகமே கிடையாது.அவளுக்கு ஜாதக தோஷம் என்று சொன்னவனை என்ன செய்ய..
-சுகுமாரன்
*ஒரு நிறுவனம் அதன் ஊழியர்களுடன் பாராட்டும் உறவு,
பசி எடுத்த விலங்கு அதன் இரை மீது காட்டும் இரக்கம் போன்றது..
சுகுமாரன்..
வெலிங்டன் நாவலில்..
*பட்டினி வயிற்றுக்கு தன்மானம் ஆடம்பரம்
-சுகுமாரன்
*ஊன்று கோலில் இருக்கிறது
பார்வையற்றவரின் கண்
-சுகுமாரன்
*நெருக்கடியான சூழ்நிலையில் மனித உதடுகள் எப்படியெல்லாம் பிதுங்கும் என்று காண்பதை தவிர பலன் சூனியம்
-சுகுமாரன்
*"என்னுடைய முதலாவது கண்
என் வாழ்க்கையை
நடிப்பாக்கிக்கொண்டிருக்கையில்
இந்த இரண்டாவது கண்
என் நடிப்பை
வாழ்க்கையாக்கிக் கொண்டிருந்தது."
-சுகுமாரன்.
*மனிதர்களை ஜெயிப்பதுபோல இயற்கையை ஜெயிப்பது அவ்வளவு எளிதில்லையா? அதன் வசீகரம் புதிரானதா? விளங்கிக்கொள்ள நெருங்கும்போதெல்லாம் புதிர் இன்னும் அடர்த்தியாகிறதே?
-சுகுமாரன்
*எதுவும் பேசாதே
இன்று மனிதனாக இருப்பதுவே குற்றம்
- சுகுமாரன்
*சந்தோசத்தின் நடைபாதை மூன்றடிதூரம்,
துயரத்தின் பாலைவெளி முடிவற்ற நீளம்
-சுகுமாரன்
*துணிச்சல் தனியானதல்ல. ஒரு பகுதி நுண்ணறிவு, ஒரு பகுதி அடங்காமை,ஒரு பகுதி பயம் எல்லாம் சேர்ந்தது தான் துணிச்சல்”
-சுகுமாரன்
*கடந்த போனதற்கும்
எதிர்காலத்துக்கும் நடுவில்
இந்த நாள் ஒரு கசியும் காயம்
-சுகுமாரன்
*நெடுங்காலம் புகைந்து கொண்டிருப்பதை விட
ஒரு கணமேனும் பற்றி எரிவதே மேல்
-சுகுமாரன்
-மணிகண்டபிரபு
No comments:
Post a Comment