Sunday, 12 July 2020

பரமேஸ்வரி

“காலையில் எழுகையிலே
ஆயிரம் கைகள் முளைக்கும்
தோசை சுடுவாள்
துணிமணி துவைப்பாள்
கத்தும் குழந்தையை
தட்டிச் சமாளிப்பாள்
அலுவலகம் கிளம்பும்
மறதிக் கணவருக்கும்
மூளையாய் இருப்பாள்
எல்லாம் முடித்து
அலுப்புடன் அமர்ந்து

டிவி காம்பியருக்கு
பாவமாய் பதில் சொல்வாள் 
"ஹவுஸ் வொய்ப்தான்"

-பரமேஸ்வரி

No comments:

Post a Comment