Saturday, 1 August 2020

நா.முத்துக்குமார்

ஏன் எல்லா பெண்களும்
தலையணை உறைகளில் 
வாத்துகளையே
வரைகிறார்கள் 

வாத்துகள் இறக்கை 
இருந்தும் 
அதிக உயரம் பறப்பதில்லை
பிறந்த வீடு, புகுந்த வீடு
எனப் பெண்களை 
போலவே 

தண்ணீருக்கும்,தரைக்கும் அலைபாய்வதே
வாத்துகளின் வாழ்க்கை 

-நா.முத்துக்குமார்

No comments:

Post a Comment