Monday, 21 September 2020

அசோகமித்திரன் பிறந்ததினம்

அசோகமித்திரன் பிறந்ததினம்

*அபிப்ராயங்கள் என்பவையைச் சொல்லப்படும் அந்த நிமிடத்துக்கு மட்டுமே உண்மை என்று எடுத்துக்கொள்ள வேண்டும்
-அசோகமித்ரன்

*கண்கள் வயதை மட்டும் காட்டவில்லை.ஒரு மனிதர் வாழ்ந்த வாழ்க்கை,வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை எல்லாவற்றையும் காட்டிவிடுகிறது-அசோகமித்ரன்

*எந்த புகைப்படமும் அதை எடுத்த நாளில் திருப்தி தருவதில்லை.,
அது அழகாக மாற அந்த மனிதனுக்கு வயது கூட வேண்டியிருக்கிறது
-அசோகமித்ரன்

*அர்த்தம், நாம் தேடிச்செல்லச் செல்ல அது நழுவிக்கொண்டே இருக்கிறது #அசோகமித்திரன்

*சாவதற்கு கூட நல்ல மகத்தான காரணங்கள் கிடைப்பதில்லை.
-அசோகமித்திரன்

*உண்மைதான் மிகப்பெரிய நகைச்சுவையாக இருக்கிறது. நகைச்சுவைதான் மிகப்பெரிய உண்மையாகவும் இருக்கிறது
-அசோகமித்திரன்

*“எல்லாவற்றுக்கும் மேலாக இந்தத் தலை கட்டுக்கடங்காத யோசனைகளால் வெடித்துக் கொண்டிருக்கிறது. எண்சாண் உடம்புக்கும் தலையே பிரதானம். எண்சாண் உடம்புக்கும் தலையே பிரதானத் தொல்லை.” 
 - அசோகமித்திரன்.

*ஒருவருடைய பெருமைகளையும் சாதனைகளையும் விதந்துரைக்க அவரின் மரணம் வரை காத்திருக்க வேணுமா -அசோகமித்திரன்

*மனிதன் கீழே விழுவதுதான் இயற்கை, ஆனால் அதற்குத்தான் அவன் அளவுக்கு மீறி அலட்டிக் கொள்கிறான்.  -அசோகமித்திரன்

*"அழகென்றால் அப்படியொன்றும் அழகில்லை! 
ஆனால் உற்று நோக்கினீர்களானால் காதல்வயப்பட வாய்ப்புள்ளது!!" 
- அசோகமித்திரன்

*மானுட வெறுப்பை காரணகாரிய ரீதியாக விளக்கவே முடியாது.
-அசோகமித்திரன்

*மேலோட்டமாக பார்த்தால் அவ்வளவு பேருடைய பொருளாதார நிலைமையும் பொதுவாக ஒன்றுதான்...எல்லோருக்கும் எப்போதுமே பற்றாக்குறை...
     -அசோகமித்திரன்

*சமகால மனிதர்கள் பற்றி அபிப்ராயம் கூறிவிட்டு ஒருவருடைய வெறுப்பையாவது பெற்றுக்கொள்ளாது தப்பிப்பது கடினம். கடைந்தெடுத்த அபிப்பிராயமே விமர்சனம்
-அசோகமித்திரன்

No comments:

Post a Comment