ஒரே இரவில் நடக்கும் ஒரு கதை. அதிக ட்விஸ்ட்கள் வைத்து சுவாரஸ்யம் எனும் பெயரில் முடிச்சு போட்டு ரசிகர்களை குழப்பாமல் நேர்த்தியாக செல்லும் ஒரு திரைக்கதை. வழக்கமான சினிமாத்தனம் இல்லாமல் ஜாலியான ஒரு திரில்லர் படம். படத்தின் தலைப்புக்கு ஏற்றார்போல் கடைசி காட்சி வரை பார்த்தால் தான் நமக்கு முடிவு தெரியும். ஒரு ஒன்லைனுக்கு நேர்த்தியான திரைக்கதை அமைத்து கொடுத்த இயக்குனர் பிரவீன் வர்மாவுக்கு சபாஷ். ஆனால் கடைசி காட்சியில் we miss praveen varma forever னு காண்பிப்பது நமக்கும் ஒரு வருத்தமான செய்தியாக இருந்தது.
#கதை
காசி வாசு மற்றும் மதி(பெண்) மூவரும் நண்பர்கள்.காசிக்கு கடன் பிரச்சனை,அமெரிக்கா செல்ல விசா கிடைக்கவில்லை. குடும்பத்தை.. கடன்காரர்களை சமாளிக்க
பணம் தேவைப்படுகிறது. ஒரு நாள் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட தோன்றுகிறது. ஐபிஎல் போல் NPL மேட்ச் நடக்கும் மொத்த நாட்களும் சூதாடி ஒரு கோடியே 70 லட்சம் சம்பாதிக்கிறான்.
ஞாயிறு இரவு அந்த பணத்தை வாங்க 3 பேரும் இரவு செல்கின்றனர்.முதல் தவணையாய் 50இலட்சம் பணத்தை வாங்கித் திரும்பும் போது பணத்தாசை பிடித்த காவலதிகாரியிடம் மாட்டி பணத்தை பறிகொடுக்கின்றனர். ஐநூறு ரூபா கதவு போச்சேனு அழ ஆரம்பிக்க மீதி தவணை பணத்தை வாங்கிக் கொண்டு வாடகை காரில் செல்லும் போது ஒரு ஆக்சிடன்ட். அதிலிருந்த பணத்தை சூதாட்ட ஆர்கனைசர் அடிச்சிடுறான். ஒரு மனுசனுக்கு எத்தனை சோதனடானு நினைக்க வைக்குது அவர்களை போல் ரசிகர்களையும்.போலிசு அடிச்ச பணமும் களவாட,சூதாடி பணமும் பறிபோக கடைசியில் என்ன ஆச்சுனு சூப்பர் ஓவரில் சூப்பர் சிக்ஸர் அடிச்சு சொல்லுது க்ளைமேக்ஸ்.
#டின்ச்
*படத்தின் பெரியபலம் திரைக்கதை. பிறகு திவாகர் மணியின் கழுகுப்பார்வை ஒளிப்பதிவும்,சன்னியின் இசையும்
*முதல் காட்சி சேசிங் ஏன் வந்ததென அடுத்த சில காட்சிகளில் சொல்வதும், ஒவ்வொரு காட்சியின் பின்னணியில் வரும் கேரக்டர்களும் மீண்டும் ஏன் வந்ததென தெரிவதும் குழப்பமில்லாமல் செல்கிறது படம்.
*நெம்பர் ப்ளேட் மாற்றம், பத்து ரூபாய் நோட்டு என சின்ன விஷயங்களிலும் ரசிக்க வைக்கிறார்கள்
*அநாவசிய காட்சிகள் ஒன்றுமில்லாமல் 1-30 மணி நேரத்துக்கு உள்ளாக க்ரிப்பான திரைக்கதை அமைத்து ரசிக்க வைத்த இயக்குநருக்கு பாராட்டுகள்
*பொழுதுபோக்க ஒரு நல்ல என்டர்டெயினர் பார்க்கலாம்
No comments:
Post a Comment